சினிமாவை பொறுத்த வரை நடிகர் நடிகைகள் சூப்பர் ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு பின்னர் அதற்கான காரணத்தை கூறிய கதைகளை பலவற்றை கேட்டுள்ளோம். அந்த வகையில் பிரபல நடிகை ஜோதிகா, விஜய்யின் மெர்சல் படத்தின் வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிப்பு திலகமாக திகழ்ந்து வந்தவர் நடிகர் ஜோதிகா. தமிழில் விஜய், அஜித், விக்ரம் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும், அஜித்தின் வாலி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான ஜோதிகா அதன் பின்னர் விஜய்யின் குஷி படத்தில் நடித்திருந்தார்.
இதையும் பாருங்க : சாக்க்ஷி குறும்படம்.! ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த முன்னாள் போட்டியாளர் காஜல்.!
குஷி படத்தை தொடர்ந்து விஜய்யுடன் திருமலை படத்தில் நடித்தார். அதன் விஜய்யுடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரத்தில் ஜோதிகா தான் நடிப்பதாக இருந்ததாம்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜோதிகா, மெர்சல் படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை கூறியுள்ளார். அதில், மெர்சல் படத்தில் எங்களுக்கு கொஞ்சம் ஸ்கிரிப்ட் மேல கருத்து ரீதியாக வேறுபாடு இருந்தது.அதனால் அந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.