சமீபத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் பல்வேறு விமர்சனங்களை பெற்றது. மேலும் வெளியான போது சுமாராக ஓடிய இந்த படம் பின்னர் பி.ஜே.பி விமர்சனம் செய்யப்பட படம் மிகப்பெரிய ஹிட்டானது.இந்த படத்தை பற்றி பல்வேறு விமர்சனங்களும்,சர்ச்சைகளும் வந்தன.இருப்பினும் இந்த படத்தில் கூறிய சில சமூக கருத்தினால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனையடுத்து சமீபத்தில் நடந்த திரைப்பட விருது வழங்கும் விழாவில் மெர்சல் படத்திற்கு சிறந்த படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன பிரச்சனை என்றால் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த விஜய்கு சிறந்த துணை நடிகர் என்ற விருதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதை கேட்ட விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் நடைபெற்ற பிரிட்டன் தேசி திரைப்பட விருதில் பல்வேறு மொழி படங்களுக்கு விருதுகள் வழங்கபட்டு வருகிறது.இந்த விழாவில் பல்வேறு நாடுகளில் வெளியான திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.இந்த விருது நிகழ்ச்சியில் விருது வென்ற ஒரே இந்திய திரைப்படம் தமிழ் படமான மெர்சல் தான்.
ஆனால் இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய்க்கு சிறந்த துணை நாடிர் என்ற பெயரில் விருது வழங்கியுள்ளது.இதனால் விஜய் ரசிகர்க்ள் அந்த விழா குழுவினர் மீது மிகுந்த கோவத்தில் உள்ளனர்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் விஜய்க்கு துணை நடிகர் என்று விருது வழங்குவது மிகவும் சங்கடபட வேண்டிய விஷயம் தான்