விஜயின் மெர்சல் படம் பல பிரச்சனைகளுக்குப் பின் வெளியான பின் தமிழக பா.ஜ.காவினர் அதில் உள்ள ஜி.எஸ்.டி பற்றிய காட்சிகலை நீக்க சொல்லி கலகம் செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த பிரச்சனையின் போது அந்த கட்சிக்கென்றே வளர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஹெச்.ராஜா சர்மா பல பிரச்சனைகளை செய்யும் வண்னம் செயல்பட்டார்.
தற்போது, நான் ஜோசப் விஜய் தான் என்று அறிவிப்பது போல் ஒரு சூசக செயலை செய்துள்ளார் விஜய். பொதுவாக படத்தின் வெற்றிக்குப் பிறகு சக்சஸ் மீட் போடும் இடத்தில் உள்ள விஜய், தற்போது மெர்சல் பட வெற்றிக்குப் பிறகு அவரது அதிகாரப்பூர்வ லெட்டெர் பேடில் அறிக்கு விட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.