ஷூட்டிங் ஸ்பாட்டில் மாரி செல்வராஜ் நடந்துகொண்ட விதம் – எரியும் தீயில் என்னை ஊற்றுவது போல உதயநிதி சொன்ன விஷயம்.

0
956
- Advertisement -

படப்பிடிப்பு தளத்தில் மாரி செல்வராஜ் நடந்துகொள்ளும் விதம் குறித்து உதயநிதி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

- Advertisement -

மாமன்னன் படம்:

இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இந்த படம் ஜூன் 29ஆம் தேதி இந்த படம் திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இது தான் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழா நடைபெற்றது.

ஆடியோ லான்ச் விழா:

அதில், மாமன்னன் படக்குழு, கமலஹாசன், வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், சூரி, வினோத் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், விழாவில் மாரி செல்வராஜ், தேவர்மகன் படத்தை பார்த்து தான் பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை இயக்கினேன். கமலஹாசனின் தேவர் மகன் படம் ஜாதி பெருமையை அப்பட்டமாக பேசி இருந்தது. மாமன்னன் உருவாவதற்கும் தேவர் மகன் படம் தான் காரணம். தேவர் மகனில் இருக்கும் இசக்கி தான் மாமன்னன். அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பது தான் மாமன்னன் படம் என்று கமலஹாசனை வம்பு இழுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

கமலஹாசனின் தேவர்மகன் படம் குறித்து சொன்னது:

இப்படி கமலஹாசனின் தேவர்மகன் படத்தை மாரி செல்வராஜ் பேசியது குறித்து கமல் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் சோசியல் மீடியாவில் மாரி செல்வராஜூக்கு எதிராக மீம்ஸ்களை தெரிக்க விட்டு வருகிறார்கள். அதோட மாரி செல்வராஜூக்கு ஏற்கனவே கமல் மீது தீராத பகை இருந்திருக்கிறது. அதை இந்த மாமன்னன் படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் வைத்து தீர்த்து கொண்டீர்கள் என்றும், நீங்க எடுத்தா புரட்சிப்படம் மத்தவங்க எடுத்தா ஜாதிப்படமா ? என்றும் கமலின் ரசிகர்கள் கமண்ட் செய்து வருகின்றனர்.

மாரி செல்வராஜ் குறித்து சொன்னது:

இந்த நிலையில் மாரி செல்வராஜ் குறித்து உதயநிதி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, படத்தின் பிரமோஷனுக்காக உதயநிதி அவர்கள் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், படப்பிடிப்பு தளத்தில் மாரி செல்வராஜ் அவர்கள் பயங்கர டென்ஷன் ஆகவும் கோபமாக இருந்தார். ஒரு முறை கோபத்தில் அனைத்து உதவி இயக்குனர்களுக்கெல்லாம் சரமாரியாக அடி விழுந்தது. எல்லோரையும் கண்டமேனிக்கு திட்டிக் கொண்டிருந்தார். அவர் படபிடிப்பு தளத்தில் பயங்கர டெரான ஆளு என்று பேசி இருந்தார். இப்படி உதயநிதி மாரி செல்வராஜ் குறித்து பேசின இந்த வீடியோவை தற்போது கமல் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள். இதை பார்த்த நெட்டிசனங்களும் மாரி செல்வராஜை விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement