என்னை ஏன் விட்டு சென்ற.! மேடையில் கதறி அழுத்த டிடி .! காரணம் இது தான்.!

0
2415
dd
- Advertisement -

தொலைக்காட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தார் பிரபல தொகுப்பாளினியான டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார் ஜூலி.

-விளம்பரம்-

கடந்த ஒரு வருடமாக இவரை ஆல்பம் பாடல்களிலும், நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராகவும் மட்டுமே கலந்து கொண்டார் டிடி. இந்த நிலையில் ஓராண்டுக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ‘என்கிட்ட மோதாதே 2 ‘என்ற நிகழ்ச்சி மூலம் மீண்டும் தொகுப்பாளினியாக களமிறங்கியுள்ளார் டிடி.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் பிரபலங்களை அழைத்து அவர்களுக்கு சில போட்டிகளை வைக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியானது. அதில் பிரஜனின் தோளில் சாய்ந்தபடி கதறி அழுதார் டிடி.

இந்த இந்த நிலையில் இன்று (ஜூன் 9) ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது இரண்டு அணியினரும் ஜோடியாக சேர்ந்து எதாவது காதல் காட்சியில் நடிக்க வேண்டும் என்று டிடி டாஸ்க் கொடுத்தார்.

-விளம்பரம்-

உடனே எதிர் அணியில் இருந்த ப்ரஜனோ டிடியுடன் நடிக்கிறேன் என்று வான்டடாக வந்தார். உடனே இருவரும் மாறி மாறி உண்மையான காதலர்கள் போல வசனங்களை பேசி நடித்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் அழுதே விட்டார்கள் என்றால் பாருங்களேன். இதை கண்ட மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கைதட்டி இவர்கள் நடிப்பை பாராட்டினார்கள்.

Advertisement