கணவரை இழந்த நடிகைக்கு மருமகனுடன் கள்ளத்தொடர்பா ? வீடியோ வெளியிட்ட நடிகை.

0
25943
actress
- Advertisement -

சோசியல் மீடியா என்ற ஒன்று வந்தவுடன் நெட்டிசன்கள் பல பிரபலங்களின் சொந்த வாழ்க்கையை கூட பிரபலப்படுத்தி விடுகிறார்கள். அதுவும் சமீப காலமாகவே சினிமா பிரபலங்கள் சிலரின் சொந்த வாழ்க்கை விசயங்களை சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாற்றி விட்டார்கள் சிலர். மேலும், சினிமா பிரபலங்கள் பற்றிய சர்ச்சைகள் தான் அதிகம் சோசியல் மீடியாவில் வந்து கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் தற்போது சோசியல் மீடியாவில் சிக்கியவர் மலையாள மொழி நடிகை தாரா கல்யாண்,

-விளம்பரம்-

- Advertisement -

மலையாள சினிமாவை சேர்ந்தவர் நடிகை தாரா கல்யாண். இவர் மலையாளத்தில் பிரபல நடிகை மட்டும் இல்லாமல் நடன கலைஞரும் ஆவார். தாராவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் இவர் மிகவும் கஷ்டப்பட்டு தனது மகள் சௌபாக்யாவுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தி வைத்தார் தாரா. சமீபத்தில் தான் மலையாள நடிகை தாரா கல்யாண் தன்னுடைய மகள் சௌபாக்யாவிற்கும், அர்ஜுன் என்பவருக்கும் திருமணம் செய்து வைத்தார். நல்ல படியாக திருமணம் முடிந்து முடிந்தது.

கணவரை இழந்த தாரா கல்யாண் தன் மகளுடன் இணைந்து டிக் டாக்கில் பாடல்களுக்கு நடனமாகும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த வீடியோக்கள் வைரலானதை தொடர்ந்து பெரும் ரசிகர்கள் எண்ணிக்கை பெற்றார். இந்நிலையில் சில மிருக குணம் கொண்ட ஜென்மங்கள் தாராவுக்கும் அவரது மருமகன் அர்ஜூனுக்கும் கள்ளத்தொடர்பு இருக்கிறது. அதனால் தான் அர்ஜுனனை தன் மகளுக்கு திருமணம் முடித்து உள்ளார் என வெட்கமே இல்லாமல் அசிங்கமாக பேசியுள்ளனர். இது தாரா மற்றும் அவரது குடும்பத்தினரை மனரீதியாக காயப்படுத்தியது. இதுகுறித்து தாரா அவர்கள் கண்ணீர் விட்டு அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-

அதில் அவர் கூறியது, யாருடைய துணையும் இல்லாமல் நான் வணங்கும் கடவுள் துணையோடு என் மகள் திருமணத்தை முடித்தேன். கல்யாண வீடியோ கிளிப்பை போட்டோ செய்து வைரலாக்கியுள்ளார்கள். என்னை சோதிக்கிறீர்கள், ஆண்டவனுக்கு தெரியும். உங்கள் மனம் என்ன கல்லா? நான் மன்னிக்கவே மாட்டேன். பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். அவர்களும் மனிதர்கள் தான். பெண்மை பற்றி தவறாக பேசுகிறீர்களே? இப்படி ஒரு கேவலமான செய்தி வதந்தி பரப்பும் அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண் இல்லையா? நீங்கள் ஒரு தாயின் வயிற்றில் பிறக்க வில்லையா? ஒரு பெண்ணை வேதனை படுத்தும் அளவிற்கு தான் நீங்கள் வளர்க்கப்பட்டுள்ளீரா? மேலும், சக்தி வாய்ந்த இந்த சமூக வலைதளத்தை நல்ல விசயங்களுக்காக பயன்படுத்துங்கள். மற்ற குடும்பங்களை கெடுக்காதீர்கள். உன் அம்மாவுக்கும் இந்த நிலை வர கூடாது என்று இவர் தன்னுடைய மனவேதனையில் கொட்டி தீர்த்துள்ளார்.

Advertisement