‘மெட்ராஸ் சென்ட்ரல்’ என்னும் யூடியூப் சேனல் தெரியாத ஒருவர் தற்போது இருக்க முடியாது. அந்த அளவிற்கு சமூக வலைதள வாசிகளை தங்கள் யூட்டிப் சேனல் மூலம் கண்ட்ரோல் செய்து வைத்திருந்தனர் ‘கோபி -சசுதாகர்’ இணை.
கடந்த ஒன்றரை வருடமாக மெட்ராஸ் சென்ட்ரல் சேனாலுக்காக பல வீடியோக்களை உருவாக்கி பிரபலம் ஆகி வந்தனர் இருவரும். இவர்களது வீடியோக்கள் பெரும்பாலும் அரசியல் கேளிகள் கலந்ததாக இருக்கும். இதனால் பலமுறை இருவருக்கும் கொலை மிரட்டல் வந்ததுள்ளதாக ஏற்னவே கூறியுள்ளனர்.தற்போது இந்த மெட்ராஸ் சென்ட்ரல் சேனலில் இருந்து வெளியேறி இருவரும் ‘Paridhabangal’ என்னும் இன்னொரு யூடியூப் சேனலை சொந்தமாக ஆரம்பித்துள்னர்.ஏன் இந்த முடிவு எடுத்தனர் என தற்போது காரணம் கூறியுள்ளனர்.
முந்தைய மெட்ராஸ் சென்ட்ரல் சேனலில் சரியான சுதந்திரம் இல்லை எனவும் நினைத்ததை செய்ய முடியவில்லை எனவும் கூறியுள்ளனர். இதனால் தான் தனியாக ஒரு சேனல் ஆரம்பித்துள்ளோம் என கூறினர்.மெட்ராஸ் சென்ட்ரல் சேனல் தினமலர் பத்திரிகையின் ஒரு அங்கம் எனவும் செய்திகள் வந்துள்ளது.