அஜித் மிஸ் செய்த அதிசயங்கள் நிறைந்த ஜீன்ஸ் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்தது ஜீன்ஸ் படம். இந்த படத்தை அசோக் அமிர்தராஜ் தயாரித்திருந்தார். இந்த படத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய், சுந்தரம் ராஜு, லக்ஷ்மி, நாசர், ராதிகா சரத்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

இந்த படத்தின் பாடல்களும் கதையம்சமும் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தினுடைய படப்பிடிப்பு  சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு பின்னர் 45 நாட்கள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்பட உலகெங்கிலும் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது.. படத்தில் நாசருக்கு விஸ்வநாதன், ராமமூர்த்தி என்ற இரட்டை குழந்தைகள் பிறக்கிறார்கள். இதில் விஸ்வநாதனை ஐஸ்வர்யாராய் காதலிக்கிறார். ஆனால், இரட்டையருக்கு தான் தன் மகன்களை திருமணம் செய்து வைப்பேன் என்று நாசர் அடம் பிடிக்கிறார்.

Advertisement

ஜீன்ஸ் படம்:

இதனால் ஐஸ்வர்யா ராயும் இரட்டை வேடம் அணிந்து நடிக்கிறார். இறுதியில் நாசருக்கு உண்மை தெரிய வருகிறது. பின் ஐஸ்வர்யாவும்? பிரசாந்தும் சேர்ந்தார்களா? என்பது தான் படத்தின் மீதி கதை. படம் முழுக்க பிரம்மாண்ட காட்சிகளும் பாடல்களும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு தான் வருகிறது. உலகத்தினுடைய 7 அதிசயங்களை ஒரே பாடலில் காட்டியவர் இயக்குனர் சங்கர் தான். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் முதலில் அஜித்குமார் தான் நடிக்க இருந்தது.

ஜீன்ஸ் படத்தில் நடிக்க இருந்த நடிகர்கள்:

ஆனால், பெப்சி ஊழியர்களுக்கு ஆதரவாக அஜித் பேசியதால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது. இதை அடுத்து பிரபுதேவா நடிக்க இருந்தது. அவரும் சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதற்கு பிறகு தான் இந்த படத்தில் பிரசாந்த் நடித்தார். இந்நிலையில் இந்த படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. அதோடு அந்த காலத்திலேயே 71வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவின் கீழ் இந்தியாவில் இருந்து ஜீன்ஸ் படத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

பிரசாந்த் திரைப்பயணம்:

மேலும், இந்த படத்தின் மூலம் பிரசாந்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த். இவர் பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் வணிக ரீதியாக வெற்றியை பெற்று இருந்தது.

Advertisement

பிரசாந்த் நடிக்கும் படம்:

மேலும், 90 காலகட்டத்தில் விஜய், அஜித்தை விட இவருக்கு தான் ஏகப்பட்ட மவுஸ் இருந்தது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்து வெற்றிப்படம் என்று பார்த்தால் அது வின்னர் தான். அதற்குப் பிறகு இவருடைய நடிப்பில் வந்த பல படங்கள் தோல்வி அடைந்து இருக்கிறது. தற்போது இவர் அந்தகன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை மோகன் ராஜா இயக்க இருக்கிறார். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

Advertisement