பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்து ஆகஸ்ட் 23 ஆம் தேதி இந்நிகழ்ச்சியின் முதல் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிரபல நடிகை விஜயலக்ஷ்மி பிக் பாஸ் வீட்டின் நுழைந்திருந்தார். இவர் உள்ள நுழைந்து ஒரு வாரம் காலம் கூட முழுமையடையாத நிலையில் ரசிகர்கள் முகம் சுளிக்கும் வகையில் ஒரு செயலை செய்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் செய்து வருகின்றனர். ஏற்கனவே மும்தாஜ், ஐஸ்வர்யா, யாஷிகா, ஜனனி குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து சென்றுவிட்டனர்.இதில் சென்ராயன் மனைவிக்கு நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி எல்லாம் கூட நடந்தது.
இந்நிலையில் நடிகை விஜயலக்ஷ்மியின் கணவர் மற்றும் குழந்தை இருவரும் பிக் பாஸ் வீட்டிற்கு விசிட் செய்தனர். பிக் பாஸ் வீட்டில் தனது கணவரை பார்த்ததும் விஜயலட்சுமி ஓடி சென்று தனது கணவரை கட்டிபிடித்து உதட்டில் முத்த மழைகளை பொழிந்தார். இதனை கண்ட போட்டியாளர்களும் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ந்து போகினர்.
என்னதான் கணவன் மனைவி என்றாலும் பல பேர் பார்க்கும் நிகழ்ச்சியில் இப்படியா நடந்துகொள்வது என்று பலருக்கும் எண்ணம் எழுந்தது. மற்ற போட்டியாளர்களாவது பரவில்லை தங்களது குடும்பத்தை 70 நாட்களுக்கும் மேலாக பிரிந்திருந்த ஏக்கத்தில் இருக்கிறாரகள் என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், சமீபத்தில் தான் விஜயலக்ஷ்மி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். அப்படி இருக்க தனது கணவரை கண்டதும் உதட்டில் முத்தமிட்டது கொஞ்சம் ஓவராக இருக்கிறது என்ற எண்ணம் தோன்றியது.