சமீப காலமாகவே அனைத்து சினிமா திரையிலும் உலக அளவில் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்களை தந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் “சூரரைப் போற்று”. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாகியுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த மாதிரி எடுக்கப்படும் படம் மிகவும் அரிதான ஒன்று. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.
இவர்களுடன் ஜாக்கி ஷெராப், தெலுங்கு நடிகர் மோகன் பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். நிக்கேத் பொம்மி ரெட்டி அவர்கள் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் சிக்கியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இந்நிலையில் இந்த சூரரைப் போற்று படத்தின் முதல் பாடல் சமீபத்தில் தான் வெளியானது. தற்போது இரண்டாவது பாடல் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியிட உள்ளது.
இதையும் பாருங்க : ‘போயி வேற வேலை இருந்தா பாருங்கடா’ விஜய்யின் IT ரெய்டு மற்றும் மத மாற்றம் குறித்து விஜய் சேதுபதி நச் ட்வீட்.
இதை இந்த படத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் போயிங் 737 விமானத்தில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த விமானம் இந்த படத்திற்காகவே வடிவமைக்கப்பட்டது. இந்த விமானம் வானில் 30 நிமிடங்கள் பயணிக்கும் என்றும் இதற்கு முன் விமானத்தில் பயணிக்காத 100 குழந்தைகள் உடன் சூர்யா பயணிப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விமானத்தில் 100 குழந்தைகள் உடன் இந்த படத்தின் பாடல் வெளியிட உள்ளார்கள்.
இவர் சினிமா உலகின் நடிப்பைத் தாண்டி பல உதவிகளையும் சமூகத்திற்கு செய்து வருகிறார். ஏற்கனவே சூர்யா அவர்கள் ‘அகரம்’ அறக்கட்டளை என்ற பெயரில் விவசாயிகளுக்கு உதவுவது, கல்வி கற்க முடியாத நிலையில் வாழ்க்கையில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி கொடுப்பது போன்ற பல நற்பணிகளை செய்து கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த பல கஷ்டங்களையும், கோரமான சம்பவங்களையும், குடும்ப சூழ்நிலையும் குறித்து பேசியது அனைவர் மனதை பதறவைத்தது. இது அனைவருக்கும் தெரிந்தே. தற்போது இந்த விமானத்தில் அகரம் கட்டளையில் பயிலும் குழந்தைகளாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.