கண் முன்னே விபத்தில் இறந்த கணவர், சூழ்ந்த வறுமை, இடையில் விபத்து – ஆண் பாவம் பட கருப்பாயின் பரிதாப நிலை

0
502
aanpavam
- Advertisement -

தமிழ் சினிமாவில் பாண்டியராஜன் நடிப்பில் வெளியான ‘ஆண் பாவம்’ படத்தில் விகே ராமசாமிக்கு அம்மாவாக, பாண்டியராஜனுக்கு பாட்டியாக நடித்தவர் கொல்லங்குடி கருப்பாயி. மதுரை-தொண்டி சாலை, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி. இவரை ஆண் பாவம் படத்தின் மூலம் பாண்டியராஜன் தான் அறிமுகப்படுத்தினார். நாட்டுப்புற பாடகியான இவர், கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண்ணிசைப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.  ஏழு வயசுல நானே சொந்தமா மெட்டு போட்டு வாய்க்கு வந்ததைப் பாட ஆரம்பிச்சு, கலைமாமணி விருது வாங்கற அளவுக்குப் பேரும் புகழுமாக கொடிகட்டிப் பறந்தேன்.

-விளம்பரம்-

ஆனா, இன்னைக்கு இடிஞ்சு கிடக்கிற வீட்டைக்கூட சரிபண்ண வழியில்லாம, வாங்கின கடனை அடைக்கமுடியாம கஷ்டத்தை விழுங்கிக்கிட்டு உசுரோடு இருக்கேன்” என வேதனையுடன் ஒலிக்கிறது அந்தக் குரல்.கொல்லங்குடி கருப்பாயி என்ற பெயரை அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கமுடியுமா? சிவகங்கை அருகிலுள்ள கொல்லங்குடியில் அவரது வீட்டில் சந்தித்தோம. வயது 75 தாண்டினாலும், குரலில் அதே கம்பீரம்.

- Advertisement -

நடந்தாலும் பாட்டு; அமர்ந்தாலும் பாட்டு எனப் பாடுவதையே தன் உயிர் மூச்சாகக் கொண்டிருக்கிறார் கருப்பாயி.அம்மா, அப்பா என்னைய படிக்க வைக்கலே. சாணி அள்ளறது; மாடு மேய்க்கிறது; ஊர்மந்தையில் விளையாடி பொழுதைக் கழிக்கிறதுனு என் இளமைக் காலம் போச்சு. ஏழு வயசுலேயே ஆடு மாடு மேய்க்க போற காட்டுல வாய்க்கு வந்த வார்த்தைகளை வெச்சுப் பாடிட்டிருப்பேன். அந்தக் காலத்துல அந்தப்புரத்துலயா இருந்தேன்? வெயிலும் நாங்களும் சமமாக திரிவோம்.

ஓப்பாரி பாட்டு நல்லா பாடுவேன். எம்.ஜி.ஆர், ராஜீவ் காந்தி இறந்தப்ப நான் மாரடிச்சு பாடினதை ஊரே மூக்கு மேல விரல்வெச்சு கேட்டுச்சுன்னா பாருங்களேன்” என்றவர்பர்மா கலவரம் நடந்தபோது என் அத்தை, மாமா பிள்ளைகள் எல்லாம் கால்நடையாகவே கொல்லங்குடிக்கு நடந்து வந்தாங்க. அப்படி வந்தவருதான் என் மன்னவரு. அப்போ எனக்கு 14 வயசு இருக்கும். என் கணவர் நல்லா படிச்சவரு. கொல்லங்குடி கிராமத்துக்குக் கணக்குப் பிள்ளையாக இருந்தவரு. என் அத்தை மகன் செல்லையா. நான் கலைமாமணி விருது வாங்குற அளவுக்கு நாட்டுப்புறப் பாட்டுல உயர்ந்ததுக்கு காரணம் அவர்தான்.

-விளம்பரம்-

விபத்தில் இறந்த கணவர் :

என்னைய நாட்டுப்புறப் பாட்டு பாடுறதுக்கு ஊக்கப்படுத்துவாரு. புருசனும் பொண்டாட்டியும் நல்லா உழைச்சோம். எங்களுக்குக் கடவுள் ஒரு பிள்ளையைக் கொடுக்கலே. என் அக்கா மகள்தான் என்னையை கவனிச்சுக்கிட்டு இருந்தா. அவளும் கார் விபத்துல இறந்துப் போயிட்டா. இப்போ, அவளோட மகள் வாசுகிதான் என்னைய பார்த்துக்குறா.`ஆயுசு நூறு’ என்று படத்தில் நடித்து முடித்துவிட்டு வீடு திரும்பிய போது, ஆல் இந்தியா ரேடியோ அலுவலகத்தில் இருந்து எங்களை வரச்சொல்லி கடுதாசி மேலக் கடுதாசியா வந்தது.

This image has an empty alt attribute; its file name is kollangkudi-karupayee296220m1.jpg

சினிமா தந்த ஏமாற்றம் :

அங்கப் போகறவழியில விபத்து நடந்து என் கண்ணு முன்னாடியேப் போய்ச் சேர்ந்துட்டாரு. அவருக்கு அப்புறம் எம் வயித்துல பொறந்ததும் போய் சேர்ந்துருச்சு என்று கூறி இருந்தார். ‘ஆண் பாவம்’ நான் நடிச்ச முதல் படம். அதுக்கு அப்புறம் பல படங்கள் நடிச்சேன். இதில், சம்பளம் கொடுத்தவங்களைவிட ஏமாத்தினவங்கதான் அதிகம். ஆயிரம் ரூபாயைக் கையில் கொடுத்துட்டு, ‘ஊருக்குப் போங்க அனுப்பி வைக்கிறோம்’னு சொல்வாங்க. நானும் எதிர்பார்த்து காத்திருப்பேன். ஒண்ணும் வராது. சினிமாவுல நடிக்கபோய் என்னை மொட்டையடிச்சு அனுப்பினதுதான் மிச்சம்.

நடிகர்களும் நடிகர் சங்கமும்:

எனக்குப் பிள்ளை இல்லைங்கிற குறையைப் போக்கி தலைமகனாக இப்பவும் இருக்கிறது நடிகர் பாண்டியராஜன்தான். சென்னைக்கு போனால், என்னைப் பார்க்காம இருக்காது. நான் சினிமாவுல நடிக்கும்போது என்னையை யாரும் நடிகர் சங்கத்துல சேர்க்கலை. பேரன் விஷால் வந்த பிறகுதான், உறுப்பினராக்கி அடையாள அட்டை கொடுத்துச்சு. இன்னைக்கு நான் சாப்பிடுற சாப்பாடு, பேரான்டி விஷால் கொடுக்குற பணம்தான். என்னை வாழவைக்கிற சாமி அது. விஷால் கல்யாணத்துக்கு நான் போணும். அதுவரைக்கும் என் உசுரு இருக்கணும். விஜய் டிவியில் நடத்தறாங்களே ‘சூப்பர் சிங்கர்’, அதுக்குப் போகணும்னு என் கடைசி ஆசை.

Advertisement