ஆருத்ராவை தொடர்ந்து எல்பின் நிதி நிறுவன மோசடியிலும் நடிகருக்கு தொடர்பு ? இது என்ன புது பஞ்சாயத்து

0
1228
- Advertisement -

ஆருத்ராவை தொடர்ந்து எல்பின் நிதி நிறுவன மோசடியிலும் நடிகர் ஆர் கே சுரேஷுக்கு தொடர்பு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு இருக்கும் டாபிக் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு தான். சென்னை அமைந்த கரைப்பகுதியில் ஆருத்ரா கோல்ட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக நிறுவனம் அறிவித்திருந்தார்கள். இதனை நம்பி லட்சக்கணக்கான மக்கள் முதலீடு செய்தார்கள். ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை அந்த நிறுவனம் திருப்பி கொடுக்கவில்லை.

-விளம்பரம்-

அதோடு இந்த நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து 2438 கோடி முதலீடாக பெற்றிருக்கிறது. இதனை அடுத்து இந்த நிறுவனம் பண மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் மோசடி அளித்து இருக்கிறார்கள் பொது மக்கள். இதனால் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த வழக்கை விசாரிக்க கூடுதல் தனிப்படை போலீசாரும் அமைத்திருக்கிறார்கள். முதல் கட்ட நடவடிக்கையாக அந்த நிறுவனத்தின் சொத்துக்கள் எல்லாம் முடக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு:

இந்த நிறுவனத்தின் மேலான் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜேஷ் ஆகியோர் வெளிநாடு தப்பி தலைமறைவாகி இருக்கின்றனர். இவர்களை தொடர்ந்து இயக்குனரும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஆன ஹரிஷ் மற்றும் மற்றொரு இயக்குனர் மாலதி, ரூசோ ஆகியோரை மற்றொரு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருக்கிறார்கள். பின் போலீசார் இவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது நடிகரும், பாஜக கலை பிரிவு மாநில நிர்வாகியான ஆர் கே சுரேஷ் என்பவருக்கும் அதில் தொடர்பு இருப்பது தெரிய வந்து இருக்கிறது.

போலீஸ் விசாரணை:

ஆர் கே சுரேஷ் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான தயாரிப்பாளர், நடிகர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து போலீஸ் ஆர்கே சுரேஷின் செல்போனை தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால், சுட்ச் ஆஃப் செய்துவிட்டார், எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. அதோடு ஆர்கே சுரேஷ் துபாய் தப்பி சென்றிருப்பது தெரிய வந்து இருக்கிறது. இதனை அடுத்து போலீசார் ஆர் கே சுரேஷை ஆஜராகும்படி சமன் அனுப்பிருந்தது. ஆனால், அந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர் கே சுரேஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

-விளம்பரம்-

மோசடியில் சிக்கிய ஆர் கே சுரேஷ்:

பின் கோர்ட் ஆர் கே சுரேஷ் கொடுத்த மனுவை ரத்து செய்து இருக்கிறது. பின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் ஆர் கே சுரேஷ் மீது லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து இருக்கிறது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தங்களுடைய விசாரணை அடிப்படையில் ஆர் கே சுரேஷ் உடைய வங்கி கணக்கு அனைத்தையும் முடக்கி இருக்கிறார்கள். அதோடு ஆர் கே சுரேஷ் 15 கோடி ரூபாய் பணம் வாங்கி இருக்கிறார் என்ற தகவல் தற்போது உறுதி ஆகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஆருத்ரா நிதி நிறுவனம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆர் கே சுரேஷ்:

இந்த நிலையில் வேறொரு நிதி நிறுவன மோசடியிலும் நடிகர் ஆர் கே சுரேஷ்க்கு தொடர்பு இருக்கும் தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது, எல் பின் என்ற நிதி நிறுவனத்தின் தலைமையகம் திருச்சியில் இருக்கிறது. இதை ராஜா என்பவர் நடத்தி வந்திருக்கிறார். இவரும் பல கவர்ச்சிகரமான விளம்பரங்களை வைத்து பல கோடி ரூபாய் பெற்று இருக்கிறார். பின் திருச்சி சுற்று வட்டார அண்ணா தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இயக்குனர்களிடம் தன்னுடைய நிதி நிறுவனத்தின் கிளைகள் மூலம் சுமார் 962 கோடி மோசடி செய்திருந்ததாக புகார் இருந்தது. இதனை அடுத்து போலீசார் ராஜாவை கைது செய்திருக்கிறார்கள். பின் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது இந்த மோசடியில் நடிகர் ஆர் கே சுரேஷுக்கும் தொடர்பு தெரிய வந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஆர்கே சுரேஷும் ராஜாவும் அடிக்கடி சந்தித்தது போலீஸ் விசாரணையில் உறுதியாக இருக்கிறது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement