ஆருத்ரா நிதி மோசடியில் தொடர்பு, இத்தனை கோடிகளை வாங்கி இருக்கு ஆர்.கே.சுரேஷ் – வாக்குமமூலத்தால் வெளியான உண்மை.

0
1398
Rksuresh
- Advertisement -

ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் ஆர் கே சுரேஷ் பல கோடி பணம் வாங்கியது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு இருக்கும் டாபிக் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு தான். சென்னை அமைந்த கரைப்பகுதியில் ஆருத்ரா கோல்ட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக நிறுவனம் அறிவித்திருந்தார்கள். இதனை நம்பி லட்சக்கணக்கான மக்கள் முதலீடு செய்தார்கள். ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை அந்த நிறுவனம் திருப்பி கொடுக்கவில்லை.

-விளம்பரம்-

அதோடு இந்த நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து 2438 கோடி முதலீடாக பெற்றிருக்கிறது. இதனை அடுத்து இந்த நிறுவனம் பண மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்து இருக்கிறார்கள் பொது மக்கள். இதனால் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த வழக்கை விசாரிக்க கூடுதல் தனிப்படை போலீசாரும் அமைத்திருக்கிறார்கள். முதல் கட்ட நடவடிக்கையாக அந்த நிறுவனத்தின் சொத்துக்கள் எல்லாம் முடக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் மேலான் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜேஷ் ஆகியோர் வெளிநாடு தப்பி தலைமறைவாகி இருக்கின்றனர்.

- Advertisement -

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு:

இவர்களை தொடர்ந்து இயக்குனரும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஆன ஹரிஷ் மற்றும் மற்றொரு இயக்குனர் மாலதி, ரூசோ ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருக்கிறார்கள். பின் போலீசார் இவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது நடிகரும் பாஜக கலை பிரிவு மாநில நிர்வாகியான ஆர் கே சுரேஷ் என்பவருக்கும் அதில் தொடர்பு இருப்பது தெரிய வந்து இருக்கிறது. ஆர் கே சுரேஷ் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான தயாரிப்பாளர், நடிகர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் விசாரணை:

மேலும், போலீஸ் விசாரனையில் இது வரை 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரபல பிரபல இயக்குனரான பாஸ்கர், செந்தில் குமார், பிரபல மோகன் பாபு உள்ளிட்டோரும் இருக்கின்றனர். இதனை அடுத்து போலீஸ் ஆர்கே சுரேஷின் செல்போனை தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால், சுட்ச் ஆஃப் செய்துவிட்டார், எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. அதோடு ஆர்கே சுரேஷ் துபாய் தப்பி சென்றிருப்பது தெரிய வந்து இருக்கிறது. இதனை அடுத்து போலீசார் ஆர் கே சுரேஷை ஆஜராகும்படி சமன் அனுப்பிருந்தது. ஆனால், அந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர் கே சுரேஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ஆனால், கோர்ட் ஆர் கே சுரேஷ் கொடுத்த மனுவை ரத்து செய்து இருக்கிறது.

-விளம்பரம்-

மோசடியில் சிக்கிய ஆர் கே சுரேஷ்:

பின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் ஆர் கே சுரேஷ் மீது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. குற்றப்பிரிவு போலீசார் தங்களுடைய விசாரணை அடிப்படையில் ஆர் கே சுரேஷ் உடைய வங்கி கணக்கு அனைத்தையும் முடக்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் ஆருத்ரா நிறுவனம் ஏஜெண்டாக இருந்த ரூசே என்பவரிடம் இருந்து ஆர் கே சுரேஷ் 15 கோடி ரூபாய் பணம் வாங்கி இருக்கிறார் என்ற தகவல் தற்போது உறுதி ஆகி இருக்கிறது. இது தொடர்பாக ஆர் கே சுரேஷுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால், அவர் வெளிநாட்டில் 5 மாதங்களாக இருக்கிறார். சென்னை திரும்பவே இல்லை.

ஐ ஜி ஆசியம்மாள் பேட்டி:

அதுமட்டுமில்லாமல் ஆருத்ரா நிதி நிறுவனம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு ஐ ஜி ஆசியம்மாள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், ஆருத்ரா வழக்கு தொடர்பாக 400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அதில் இதுவரை 3500 பேர் புகார் கொடுத்திருக்கிறார்கள். 256 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆர் கே சுரேஷ் என்பவர் 15 கோடி வாங்கி இருப்பதாக விசாரணையில் தெளிவாகி இருக்கிறது. இதனை குற்றப்பத்திரிக்கையில் சேர்த்திருக்கிறார்கள். மேலும், வெளிநாடுகளில் உள்ள மூன்று நிறுவனங்களை சேர்ந்த 9 நபர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Advertisement