கார்த்தியா, பார்த்திபன் மகனா ? ஆயிரத்தில் ஒருவன் 2வில் தனுஷ் நடிக்கும் கதாபாத்திரம் குறித்து போட்டுடைத்த பார்த்திபன்.

0
830
aayirathil
- Advertisement -

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்து பார்த்திபன் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். அந்த வகையில் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனை அடுத்து தற்போது பார்த்திபன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பொன்னியின் செல்வன். பல பேரின் கனவை, 70 ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கி சாதித்து காட்டி இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் படம் விமர்சனம்:

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் நேற்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. மேலும், பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையர் என்ற கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்திருக்கிறார். இதற்காக பார்த்திபன் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். படத்தின் ரிலீஸுக்கு பார்த்திபன் தஞ்சாவூரில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து கண்டு களித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பார்த்திபன் அளித்த பேட்டி:

தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் ரிலீஸுக்கு முன்பு பார்த்திபன் அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பேட்டியில் பார்த்திபன் கூறியிருந்தது, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் தனுஷ் தான் நடிக்க இருந்தது. தனுஷ் உடைய கால்ஷீட் கிடைக்காததனால் தான் தனுசுக்கு பதிலாக நான் நடித்தேன்.

தனுஷ் குறித்து பார்த்திபன் சொன்னது:

அதுமட்டுமில்லாமல் வெளியாக இருக்கும் ஆயிரத்தில் ஒருவன் 2ல் முதல் பாகத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். என்னை விட அந்த கதாபாத்திரத்தில் தனுஷ் நன்றாக நடிப்பார். அவர் நடித்தால் அந்த கதாபாத்திரம் சிறப்பாக இருக்கும் என்று கூறியிருந்தார். இப்படி பார்த்திபன் அளித்துள்ள பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சோழ மன்னனாக தனுசை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Advertisement