பெண்களுக்கு குரல் கொடுக்கும் லட்சணம் இதானா – கேள்வி கேட்ட குட்டி பத்மினி, வயதை கூறி ஏளனம் செய்த அபிராமி.

0
754
Abhirami
- Advertisement -

காலக்ஷேத்ரா விவாகாரத்தில் அபிராமி தொடர்ந்து கல்லூரி நிர்வாகதிற்கு ஆதரவாகவும் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாகவும் பேசி வரும் நிலையில் பிரபல நடிகை குட்டி பத்மினி இந்த விவகாரத்தில் அபிராமியை விமர்சித்து உள்ளார். சென்னை அடுத்த திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணி தேவி கலை கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி முறையில் இந்த கல்லூரி செயல்படுகிறது.

-விளம்பரம்-

இந்த கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் மீதான ஏராளமான மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். கலாஷேத்ரா சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றால் ஆசிரியரின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் தெரிவித்தும், அத்துமீறி மிரட்டியும் நடந்ததாகவும் மாணவிகள் புகார் அளித்து இருந்தார்கள்.

- Advertisement -

மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வழக்கில் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஐதராபாத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதை தொடர்ந்து உதவி பேராசிரியர் ஹரிபத்மனை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இந்த விவகாரத்தில் நடிகை அபிராமி கல்லூரிக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருகிறார். கலாஷேத்ரா பற்றி சமூக வலைதளத்தில் பரவும் தகவல்களால் வேதனையடைந்தேன்.கலாஷேத்ரா ஆசிரியர் நிர்மலா என்பவர் என்னை தொடர்பு கொண்டு ஹரிபத்மனுக்கு எதிராக பேசுமாறு கூறியுள்ளார். பேராசிரியர் ஹரி பதமன் எங்களுக்கு வகுப்பெடுத்த வரை எந்தவித தொல்லையும் அளிக்கவில்லை.

-விளம்பரம்-

ஒரு பக்கமாக நின்று பேசாமல் இருதரப்பும் விசாரித்து முடிவெடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார். அபிராமி இப்படி காலக்ஷேத்ரா கல்லூரிக்கு ஆதரவாக பேசி வருவதை பலரும் கண்டித்து வருகிறார்கள். சமீபத்தில் கூட பிக் பாஸ் நிகழ்ச்சி நடிகை சனம் செட்டி, நடிகை மற்றும் மருத்துவரான ஷர்மிளா போன்ற பல இந்த விவாகரத்தில் அபிராமியை விமர்சித்து இருந்தார்கள். அந்த வகையில் இந்த விவகாரம் குறித்து பிரபல நடிகையான குட்டி பத்மினி பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

அந்த பேட்டியில் நீங்கள் திரைத்துறையில் இருப்பதால் ஒருவர் உங்களை தொடுவது என்பது எந்த Feelயும் உங்களுக்கு இருக்காது ஆனால், மற்ற பெண்களுக்கு அப்படியா என்று நடிகர் அபிராமி பார்த்து கேட்கிறேன் பெண்களுக்காக குரல் கொடுக்கும் லட்சணம் இதுதானா என்று கூறியிருந்தார். குட்டி பத்மினியின் இந்த கருத்திற்கு பதிலடி கொடுத்திருக்கும் அபிராமி சினிமா துறையில் இருக்கும் அனைத்து பெண்களும் உங்களைப்போல கிடையாது குட்டிபத்மினி ஆன்ட்டி. நீங்கள் எதையும் Feel செய்யாதது பாவமாக இருக்கிறது. இன்னொரு விஷயம் – உங்களுக்கே பொத்திக்கிட்டு வருதுன்னா நல்ல குடும்பத்தில் பிறந்த எங்களுக்கு எவ்வளவு எரியும் ஆன்ட்டி நாங்க பார்த்துக்கிறோம் ஆன்ட்டி. வயசான காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள்

Advertisement