தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது அஜித் அவர்கள் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ படத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன், ஆரவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் முதல் சிங்களான ‘சவதீகா’ பாடல் படத்தின் பயங்கர ட்ரெண்டிங் ஆனது. அறிவு எழுதி இருக்கும் இப்பாடலை பாடகர் ஆண்டனிதாசன் பாடியிருந்தார்.
விடாமுயற்சி படம்:
மேலும், இந்தப் பாடல் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டதாகும். இப்படம் முதலில் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி போனது. தற்போது இப்படம் வருகின்ற பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகயுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் ஆரவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் விடாமுயற்சி படம் குறித்து அளித்த பேட்டியில் ஆரவ், அஜித் சாருடன் சேர்ந்து நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
ஆரவ் பேட்டி:
இதற்காக நான் பல ஆண்டுகள் காத்திருக்கிறேன். இதற்கு முன்பும் நான் அஜித் சாரோட நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்தது. ஆனால், மிஸ் ஆகிவிட்டது. விடாமுயற்சி படத்தில் நான் நடிக்கிறேன் என்று சொன்னதுமே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அஜித் சார் என்னுடைய மனைவிக்கும், என்னுடைய குடும்பத்துக்குமே சரி ரொம்ப ஸ்பெஷல். எனக்கு சினிமாவில் நெருங்கிய நண்பர்கள் கிடையாது, வாழ்விலும் நெருங்கிய நண்பர்கள் ரொம்பவே குறைவு. இப்போ அஜித் சாருக்கு ரொம்ப க்ளோஸ் ஆகிருக்கிறேன். அஜித் சாரிடம் பேசுகிற ஒவ்வொரு முறையும் புதுசாக பேசுற மாதிரி தான் இருக்கு.
அஜித் குறித்து சொன்னது:
அஜித் சாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டதும் நேரில் வாழ்த்து தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு நான் நேரில் சென்று வாழ்த்து சொன்னேன். சினிமா பின்புறம் இல்லாதவர் இத்தனை ஆண்டுகள் எப்படி சினிமாவில் இருக்க முடியும் என்பது ஆச்சரியம் தான். மேலும், விடாமுயற்சி சூட்டிங் ஸ்பாட்டில் விபத்து நடந்தது உண்மைதான். ஓரிடத்தில் கார் குதிச்சு போய் தரை இறங்கியது. என்னைக்குமே நான் டென்ஷன் ஆக நினைத்ததில்லை. அவர் கூட நடிக்கும் போது என்ஜாய் பண்ணி தான் இருந்தேன். கார் இப்படி கவிழ்ந்து விழுமா அப்படின்னு சாரிடம் பேசி சிரித்துக்கொண்டே இருந்தோம்.
விடாமுயற்சி விபத்து:
அடுத்த சாட்டில்தான் அந்த விபத்து நடந்தது. கார் அவுட் ஆஃப் கண்ட்ரோல் போனது. அது ஒரு உண்மையான விபத்து தான். நாங்க வந்த ஸ்பீடுக்கு கார் ரோட்டின் பக்கத்திலிருந்த ஜல்லியில் பட்டு அவுட் ஆஃப் கண்ட்ரோல் ஆகிவிட்டது. பாலைவனம் என்பதால் அப்படியே ரோல் ஆகி கீழே போனது. ஒரு நடிகரை வைத்துக்கொண்டு இப்படி நடந்ததால் ரொம்பவே மோசமாக பீல் பண்ணினார். விபத்து நடந்த பின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்ததும் ஆரவுக்கு என்னாச்சு என்று தான் கேட்டார். ஆரவை பாருங்கள் என்று சொன்னார். சாருடைய வயதில் இருக்கும் நபர் குதிக்க மாட்டார்கள். ஆனால், அஜித் சார் ரிஸ்க் எடுத்து குதிப்பார். பயமே இல்லாமல் ஒருத்தரை நான் பார்த்திருக்கிறேன் என்றால் அது அஜித் சார் தான் என்று கூறி இருக்கிறார்.