1996ல வாங்குன 18 லட்ச ரூபா காச இன்னும் குடுக்கிறான் – அஜித் பற்றி சர்ச்சையை கிளப்பிய தயாரிப்பாளர். வீடியோ இதோ.

0
49004
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். அஜித் பற்றி பலர் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தான் இதுவரை நாம் பார்த்திருப்போம் ஆனால், 25 ஆண்டுகளுக்கு முன் தன்னிடம் வாங்கிய பணத்தை இன்னும் திருப்பித்தரவில்லை என்று தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் என்பவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர். 1996-ல் அஜித் என்னிடம் பணம் கேட்டார். என்னுடைய அப்பா அம்மா சிங்கப்பூர் போக வேண்டும் எனக்கு ஒரு 6 ரூபாய் பணம் கொடுங்கள் என்று கேட்டார். நானும் அந்த 6 லட்சம் ரூபாய்க்கு டிராப்ட் வாங்கி கொடுத்துவிட்டேன்.

-விளம்பரம்-

அதன்பின்னர் மாண்புமிகு மாணவன் படம் எடுத்தேன் அது சரியாக ஓடவில்லை. அப்போது அஜித்திடம் பேசிக்கொண்டிருந்தேன் எனக்கு ஒரு படம் கொடுங்க சார் என்று. அவரும் கண்டிப்பாக தருகிறேன் என்று சொன்னார். இப்படியே 1998 வரை இழுத்து விட்டார். அதன் பின்னர் வெடிமுத்து என்பவர் என்னிடம் வந்து ஒரு படம் எடுப்பதாக கூறினார். அப்போதுதான் அவள் வருவாளா திரைப்படத்தை நான் தயாரிப்பதாக இருந்தேன். அதேபோல அஜிதிக்கும் 12 லட்ச ரூபாயை கொடுத்தேன். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அதன் பின்னர் அஜித் எனக்கு போன் செய்து வெடமுத்துவிற்குி நீங்கள் உதவி செய்ய வேண்டாம் உங்களுக்கு நான் உங்களுக்கு தனியாக ஒரு படம் நடித்துக் கொடுக்கிறேன் என்றார்.

- Advertisement -

அப்போது இந்த பணத்தை நான் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்று சொன்னதால் நானும் விட்டுவிட்டேன்.பின்னர் அந்தப் படமும் சரியாக ஓடவில்லை அதன்பின்னர் பணத்திற்காக நான் அஜீத்தை தொடர்பு கொண்டால் அப்போதுதான் சுரேஷ் (அஜித் மேனஜர்) என்பவன் போனை எடுத்து அஜித் வெளியில் இருக்கிறார், அஜித் பேசிக் கொண்டிருக்கிறார் என்று ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிக்கொண்டே இருந்தான். நான் அஜித் என்னிடம் பணம் வாங்கியிருக்கிறார் எனக்கு படம் பண்ணி தர தேவையில்லை என்னுடைய பணத்தை திருப்பிக் கொடுங்கள் நின்றேன். மேலும் 1996 ஆம் ஆண்டு வாங்கிய 18 லட்சம் இன்று என்ன மதிப்பு அதை இதுவரை கொடுக்கவே இல்லை. இதனிடையே நான் முதலில் கொடுத்த 6 லட்சத்தில் வாங்கவில்லை என்று சத்தியம் செய்கிறான்.

வீடியோவில் 7 : 40 நிமிடத்தில் பார்க்கவும்

பின்னர் என்னாலும் வங்கியிலிருந்து அந்த கணக்குகளை எடுக்க முடியவில்லை. இப்படியே போக ஒரு கட்டத்தில் நான் பணமே வாங்கவில்லை என்று சொல்லிவிட்டார். பின்னர் குமுதம் பத்திரிக்கையில் அழைத்து நான் அஜித் இதுபோன்று என்னிடம் பணம் வாங்கினார் திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டான் என்று பேட்டி கொடுத்தேன். அதற்கு அவன் நான் வாங்கவில்லை ஆண்டவனுக்கு தான் தெரியும் என்று சொல்லி விட்டான். அதையே பத்திரிக்கையிலும் போட்டுவிட்டார்கள் பின்னர் சன் டிவியில் இருந்து எல்லாம் எனக்கு அழைப்பு வந்தது நான் பொய் சொல்லவில்லை அவருக்கு பணம் படைத்த எல்லா ஆதாரங்களும் இருக்கிறது என்று சொன்னேன்.

-விளம்பரம்-

பின் நாட்கள் செல்ல செல்ல அனைத்தையும் மறந்து விட்டார்கள். இவனுக்கு பணம் வாங்கியதை நினைவு இல்லை என்றால் தற்போது 50 கோடி 40 கோடி சம்பளம் வாங்குற இப்போது நான் கஷ்டத்தில் இருக்கிறேன் உனக்கு லெட்டர் கொடுத்தால் அதற்கு பதில் சொல்வது கிடையாது. தயாரிப்பாளர் சங்கத்தில் கூட நான் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் ,எனக்கு பதில் வரவில்லை. இப்படி ஒரு நடிகன் வாங்கிய பணத்தை இல்லை என்று சொல்வானா இன்று நீ 40 ,60 கோடி சம்பாதிக்க என் பணத்தைகுடுடா, ஏண்டா இப்படி ஏமாத்தறீங்க. எனக்கு நீ படம் பண்ணி தர வேண்டாம்டா என் பணத்தை கொடுடா என்று புலம்பித் தள்ளி இருக்கிறார்

Advertisement