விட்டு சென்ற லிவிங் டு கேதர் காதலி, அனாதையாய் நின்ற பப்லு, ஆறுதலை வந்த பழைய உறவு. இதான் நிரந்தரம்.

0
374
- Advertisement -

சோசியல் மீடியா முழுவதும் கடந்த சில வாரமாகவே பப்லு பிரித்விராஜ்-ஷீத்தல் விவகாரம் தான் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாக மிக பிரபலமான நடிகராக இருப்பவர் பிரித்திவிராஜ். இவர் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இவரை எல்லோரும் பப்லு என்று தான் அழைப்பார்கள்.

-விளம்பரம்-
babloo

மேலும், இவர் சினிமா உலகிற்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது. இவர் பீனா என்பவரை திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் உள்ளார். பின் இவர் தன்னுடைய முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருக்கிறார்கள். இந்த சமயத்தில் தான் பப்லுக்கு மலேசியாவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு இருக்கிறது. இவரின் பெயர் ஷீத்தல். முதலில் இந்த பெண் பப்லுக்கு தொழில் ரீதியாக தான் உதவியாளராக இருந்தார்.

- Advertisement -

பிரிதிவிராஜ்-ஷீத்தல் திருமணம்:

மேலும், கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்ததாக தகவல்கள் வெளியானது. இருவருக்கும் 30 வயது வித்தியாசம் இருக்கிறது. இவர்களுடைய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் இவர்கள் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தங்களுடைய வேலையை செய்திருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில வாரமாகவே இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருந்தது. அதோடு சீத்தல் மற்றும் பிரிதிவிராஜ் இருவருமே தங்களுடைய சோசியல் மீடியாவில் தாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டு புகைப்படங்களை டெலிட் செய்து இருக்கிறார்கள்.

babloopritiviraj

பிரிதிவிராஜ்-ஷீத்தல் பிரிவு:

இதை பார்த்த பலரும் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா? சண்டையா? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், இது குறித்து இருவருமே எந்த ஒரு உறுதியையும் செய்யவில்லை. இது தொடர்பாக இவர்கள் பேட்டி கொடுத்து வருகிறார்கள். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக யார் கேள்வி கேட்டாலுமே பிரித்திவிராஜ் கோவமாக பேசி சரியான பதிலை சொல்லாமல் சென்று விடுகிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் பிரிதிவிராஜ் தன் மகனை பார்க்க நேரில் சென்று அவரை மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதோடு பழையபடி தன் மகனையும் இவர் பார்த்துக் கொள்வதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சீத்தல் குறித்து என்ன கேட்டாலுமே ச்சீ தள்ளு என்று கடுப்பாகி நானே நொந்து போயிருக்கிறேன். தயவு செய்து கொஞ்ச நாளைக்கு என்னுடைய பர்சனல் விஷயத்தை பேசாதீர்கள், கேட்காதீர்கள்.

babloo

சினிமா சீரியல் பற்றி ஏதாவது பேசுங்கள். நான் பாலிவுட்டில் ஒரு படம் பண்ணினேன். அது இப்போ நல்ல வசூலை தந்திருக்கிறது. யாரும் 53 வயசு 31 வயசு என்று கேள்வி கேட்காதிர்கள் என்று டென்ஷன் ஆகி கையெடுத்து கும்பிட்டு போயிருக்கிறார். இதன் மூலம் சீத்தல் பிரித்திவிராஜ் பிரிந்து இருப்பது தெள்ளத் தெளிவாகி இருக்கிறது. ஆனால், இவர்கள் பிரிவிற்கு காரணம் என்ன தான் தெரியவில்லை.

Advertisement