‘இந்த திருமணத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ – சொன்னபடி மூன்றாம் திருமணம் செய்து கொண்ட நடிகர் பாலா

0
326
- Advertisement -

நடிகர் பாலாவின் மூன்றாவது திருமண புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் பாலா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அன்பு’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின் இவர் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதை அடுத்து சில காலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

அதனால், இவர் மலையாள மொழிக்குச் சென்றுவிட்டார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் அஜித்தின் ‘வீரம்’ படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இருந்தும் இவரால் தொடர்ந்து தமிழ் மொழி படங்களில் நடிக்க முடியவில்லை. தற்போது இவர் மலையாள படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும் ஆவார். இதனிடையே நடிகர் பாலா கேரளாவை சேர்ந்த பிரபல பாடகி அம்ருதாவை கடந்த 2010 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து இருந்தார்.

- Advertisement -

பாலா குறித்து:

இவர்களுக்கு அவந்திகா என்ற மகளும் இருக்கிறார். பின் சில காரணங்களால் 2019 ஆம் ஆண்டு அம்ருதாவை பாலா விவாகரத்து செய்தார். பின் மருத்துவரான எலிசபெத் என்பவரை பாலா இரண்டாவது திருமணம் செய்து இருந்தார். சமீபத்தில் தான் இவர்களுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று செய்திகள் வந்தது. இதற்கு இடையே பாலா கொடுத்த சில பேட்டிகளில் மகள் அவந்திகா குறித்து நிறைய பேசி இருந்தார். அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் பாலாவின் மகள் அவந்திகா வீடியோ வெளியிட்டு இருந்தார்.

பாலா மகள் வீடியோ:

அதில், என்னுடைய அப்பா என்னை ரொம்ப நேசிப்பதாகவும், என்னை மிஸ் செய்வதாகவும், எனக்கு நிறைய பொருட்களை வாங்கி தந்ததாகவும் பல பேட்டிகளில் கூறியிருந்தார். அது எதுவுமே உண்மை கிடையாது. அவரை நினைக்கும் போது, அவர் குடித்துவிட்டு என்னையும் என் அம்மாவையும் செய்த கொடுமை தான் ஞாபகம் வருகிறது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து பாலா வெளியிட்ட வீடியோவில், மகளே முதலில் என்னை அப்பா என்று அழைத்ததற்கு நன்றி. நான் உன்னுடன் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை என்று உருக்கமாக பேசி இருந்தார்

-விளம்பரம்-

பாலா கைது:

அதைத்தொடர்ந்து பாலாவின் முதல் மனைவி அம்ருதா, ‘பாலா என்னையும், என்னுடைய மகளையும் வழிமறித்து துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார்’ என்று புகார் அளிக்க காவல்துறை எடப்பள்ளியில் உள்ள பாலாவின் வீட்டில் வைத்து அவரை கைது செய்து இருந்தது. அதற்குப்பின் நடிகர் பாலா, ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் பாலா தான் மூன்றாவது திருமணம் செய்யப்போவதாக சமீபத்தில் தான் அறிவித்திருந்தார்‌. மேலும், தனக்கு குடும்ப பங்கில் இருந்து 250 கோடி சொத்து வந்திருப்பதாகவும், அந்த சொத்துக்கு தான் சொல்பவரே வாரிசு என்றும் அறிவித்திருந்தார்.

பாலா மூன்றாவது திருமணம் :

இந்நிலையில் இன்று காலை 8:30 மணி அளவில், கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள கலூர் பாவகுளத்தில் தனது தாய்மாமன் மகள் கோகிலா என்பவரை பாலா மணந்தார். பாலாவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாலா, ‘இந்த திருமணத்தில் என்னுடைய அம்மாவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அவரின் உடல்நிலை சரியில்லை. கோகிலாவின் கனவை இந்த திருமணம் நிறைவேற்றும். கோகிலாவுக்கு மலையாளம் தெரியாது. கடந்த ஒரு வருடமாக எனது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதற்கு அவர் முக்கிய காரணம். கோகிலா எனது உறவினர் பெண் என்பதால் இந்த திருமண வாழ்க்கை நன்றாகச் செல்லும் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement