தமிழ் சினிமாவில் வெற்றிகரமான தயாரிப்பாளர்கள் என்று நாம் ஒரு சிலர் மட்டுமே கூற முடியும். பல்வேறு தயாரிப்பாளர்களும் தாங்கள் தயாரித்த படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தால் தற்கொலை செய்துகொண்ட கதைகளும் பல உண்டு.
அதே போல சினிமா துறையில் பல படங்களில் நடித்து சம்பாதித்த பணத்தை தயாரிப்பில் இறங்கி சம்பாதித்த மொத்த பணத்தையும் இழந்த நடிகர்கள் வரிசையில் காமெடி நடிகர் கஞ்சா கருப்புவும் ஒருவர். ஆம், காமெடி நடிகரான கஞ்சா கருப்புவும் ” வேல்முருகன் போர்வெல்” என்று படத்தை தயாரித்து உள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் வெளிவந்தது கூட பலருக்கும் தெரியாது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் கஞ்சா கருப்பு இந்த படத்தால் ஏற்பட்ட நஷ்டம் குறித்து தெரிவிக்கையில், அந்த படத்தை ஆரம்பித்தேன் என்று தெரிவில்லை. இந்த படம் ஆரம்பத்தில் இருந்தே தேவையில்லாத செலவுகள் தான் ஆனது.
நான் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பணத்தையும் அந்த படத்தின் இயக்குனர் படத்தை இழுத்தடித்து காலி செய்து விட்டார். என்னிடம் இயக்குனர் பாலா அண்ணாவும் அமீர் அண்ணாவும் படம் எடுப்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல சிக்கினால் சிதறி விடுவாய் என எச்சரிக்கை செய்தனர் நான் அதனை கேட்க்காமல் படம் எடுத்தேன் என்று புலம்பியுள்ளார் நடிகர் கஞ்சா கருப்பு.