82 வயது, பல ஆண்டுகள் கழித்து மேடையில் பேசிய கவுண்டமணி – வைரலாகும் வீடியோ இதோ.

0
975
goundamani
- Advertisement -

கவுண்டமணியின் தற்போதைய நிலையை குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் கமண்ட்ஸ்களை குவித்து வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் காமெடியில் ஜாம்பவனாகவும், சக்கரவர்த்தியாகவும் திகழ்ந்தவர் கவுண்டமணி. அன்றும் இன்றும் என்றும் இவருடைய காமெடிக்கு எவரும் நிகரில்லை என்று சொல்லலாம். காமெடி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் முதலில் ஞாபகத்தில் வருவது கவுண்டமணி பெயர் தான். அந்தளவிற்கு தன்னுடைய நகைச்சுவை திறமையின் மூலம் மக்களை தன்வசம் படுத்தியுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய கவுண்டர்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவர் கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர். இவர் ரஜினி கமல் காலம் தொடங்கி தற்போது உள்ள நிறைய நடிகர்கள் வரை என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் பிறந்தது திருப்பூர் மாவட்டம் மடத்தூர் கிராமம் என்றாலும் இவர் வாலிப பருவத்தில் வளர்ந்தது எல்லாம் வல்லகுண்டபுரம் என்ற கிராமம் தான்.

- Advertisement -

கவுண்டர் மன்னன் கவுண்டமணி ;

இது உடுமலை, பொள்ளாச்சிக்கும் இடையில் இருக்கு. இந்த வல்லகுண்டபுரம் கிராமம் கவுண்டமணியின் பாட்டி வீடாகும். அதோட கவுண்டமணியின் அக்காவும் அங்கே தான் இருக்கிறார். இவர் முதலில் நாடக மேடையில் தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு சினிமாவில் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வந்தார். முதலில் இவர் தனியாக தான் படங்களில் கலக்கி வந்தார். பின் செந்திலுடன் இணைந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார்.

சினிமாவில் இருந்து விலக காரணம் :

சமீபத்தில் நடிகர் கவுண்டமணியை வைத்து நடிகர் தனுஷ் படம் இயக்கப் போவதாகவும் சோசியல் மீடியாவில் பரவியது. கவுண்டமணி சினிமாவில் நடிப்பதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அவருக்கு ஏற்கப்பட்ட சர்க்கரை நோய் வியாதி காரணமாக அவரது உடல்நலனில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டவே அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இருப்பினும் அடிக்கடி அவரின் புகைப்படம் மட்டும் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது.

-விளம்பரம்-

விழாவில் பங்கேற்ற கவுண்டமணி :

சமீபத்தில் கவுண்டமணி அவர்கள் பிரபலம் ஒருவரின் திருமண விழாவிற்கு சென்று இருந்தார்.அப்போது அவரை கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு போய் இருந்தார்கள். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கவுண்டமணிக்கு என்ன ஆச்சு? உடல்நிலை பிரச்சனையா? என்று நலம் விசாரித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் கவுண்டமணியின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

கவுண்டமணிலேட்டஸ்ட் வீடியோ :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார் கவுண்டமணி. தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் ஐசரி வேலன், 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் அவரது திருவுருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் ஐசரி வேலன் சிலையை திறந்து வைத்தார். மேலும் இந்த விழாவில் பல்வேருபிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில் நடிகர் கவுண்டமணியும் இந்த விழாவில் கலந்துகொண்டு பேசினார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement