தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களான ஜெய் மற்றும் அஞ்சாலி சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தமிழ் சினிமா வட்டாரங்களில் சில செய்திகள் வைரலாக உலாவி கொண்டு வந்திருந்தனர். ஆனால், சமீப்பதில் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் என்று தற்போது ஒரு தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் நடிகர் ஜெய் , நடிகை அஞ்சலிக்கு ஜோடியாக நடித்திருந்தார. இந்த படத்தில் நடித்தக் கொண்டிருந்தபோது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. சில வருடங்களாக காதலித்து வந்திருந்த இவர்கள் இருவரும் தங்கள் அன்பை மாறி மாறி பரிமாறி வந்தனர். ஆனால், நடிகர் ஜெய் இடையில் நடிகை நஸ்க்ரீயாவை காத்திலிப்பதாக தகவல்கள் வெளியாகின.
நடிகை நஸ்ரியாவை காதலிப்தனால் தான் நடிகர் ஜெய் இஸ்லாமியராகவும் மதம் மாறினார் என்று கூட தகவல்கள் வெளியாகின. இருப்பினும் ஜெய் மற்றும் அஞ்சலி ஜோடி தொடர்ந்து காதலித்து வருவதாக தான் பேசப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு நடிகை அஞ்சலியின் பிறந்த நாலன்று கூட நடிகர் ஜெய் கவிதை மூலம் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை கூட தெரிவித்திருந்தார்.
Thank You so much Anju.. Stay Happy… https://t.co/4BPNrmvDfl
— Jai (@Actor_Jai) April 8, 2018
ஆனால், சமீபத்தில் நடிகை அஞ்சலியின் பிறந்தநாள் சென்றுள்ளது. இந்த வருடம் நடிகை அஞ்சலிக்கு ஒரு வாழ்த்துகளை கூட கூறவில்லையாம். இதனால் இவர்கள் இருவரின் காதல் முறிந்து விட்டதா என்று ரசிகர்கள் எண்ணி வருகின்றனர். கடைசியாக இவர்கள் இருவரும் ‘பலூன்’ என்று படத்திலும் இணைந்து நடித்திருந்தனர்.ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை என்பது குறிப்பிடடத்தக்கது.