மணிரத்தினமிடம் இது எப்போதும் மாறவே இல்லை – தக் லைப் பட விழாவில் கமல்ஹாசன் பகிர்ந்த தகவல்

0
175
- Advertisement -

தக் லைப் பட விழாவில் கமல் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்து இருக்கிறார். அதோடு தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் கமலஹாசன்.
அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியிருந்த படம் விக்ரம்.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது. இதனை அடுத்து கமலின் நடிப்பில் வெளியாகி இருந்த படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி இருந்தார். 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் வெளிவந்த இந்தியன் 2 படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை.

- Advertisement -

கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணி:

இதனை அடுத்து தற்போது கமல் நடித்த படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். ஏற்கனவே கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படம் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது. இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

தக் லைஃப் விழாவில் கமல்:

இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான போஸ்ட் ப்ரோடாக்சன் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் ஏ ஆர் ரகுமான். மணிரத்தினம், கமல், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய கமல், இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் தான் நான் இப்போது பேசுகிறேன். இது அரசியல் கிடையாது. இது தமிழனுடைய யதார்த்தம். விருந்தோம்பல் தமிழனுக்கு கைப்பழக்கம்.

-விளம்பரம்-

மணி பற்றி சொன்னது:

இதை 2000 வருஷமாக செய்கிறோம். இப்போதும் மணி சாருக்கும் எனக்கும் இடையில் எதுவுமே மாறவில்லை. நாங்கள் பேசிய கதைகள் தான் நாயகன் மற்றும் தக் லைப் படங்கள். வியாபார கணக்கில் சிலரை படத்துக்குள் கொண்டு வருவார்கள். மக்கள் முடிவுக்கும் விருப்பத்திற்கும் விநியோகஸ்தர்கள் தலை வணங்குவார்கள். அப்படித்தான் புதிய திறமைகள் வருகிறார்கள். அப்படி தான் சிம்புவும் வந்தார். இயக்குனர் பெயர் வெறும் மணிரத்தினம் கிடையாது. ஐந்தரை மணிரத்தினம். சரியாக அத்தனை மணிக்கு வந்து விடுவார். இரவு முழுக்க அதே நினைப்போடு இருந்தால்தான் அலாரம் இல்லாமல் வர முடியும். நாயகன் படத்தில் இருந்தே அவருக்கு இந்த பழக்கம் இருக்கிறது.

படம் பற்றி சொன்னது:

இந்த விஷயத்தில் அவரிடம் நான் பாலச்சந்தரை சாரை பார்த்தேன். டி ஆருக்கு என் மேல் ரொம்ப பிரியம். எனக்கு ஒன்று என்றால் ஓடி வந்து விடுவார். அதே மாதிரி தான் சிம்புவும் குறையாத பாசம் காட்டி இருக்கிறார். இந்த படத்தில் எனக்கு இரண்டு கதாநாயகிகளும் ஐ லவ் யூ சொல்லவே இல்லை. இந்த படத்தில் எனக்கு ஐ லவ் யூ சொன்ன ஒரே ஆள் ஜோஜு ஜார்ஜ்தான். மணிரத்தினம் முதல்முறையாக ராஜ்கமல் நிறுவனத்தில் படம் பண்ணியிருக்கிறார். இந்த படம் கண்டிப்பாக ஓடும். நாங்கள் சினிமாவை காதலிப்பவர்கள். அதனால் தான் இந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. மொழிப்போர் நடந்து கொண்டிருக்கிற நேரம். இது எங்களுடைய மும்மொழி திட்டம். அதனால் தான் ரகுமான் கொடுத்த ஐடியாவை ஜிங்குச்சானு பயன்படுத்தினோம். அது சீன வார்த்தை கூட இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement