‘ஜெய் பீம்’ படம் பண்ண எனக்கு நயன்தாரா மேம் தான் ஒத்துழைச்சாங்க – மணிகண்டன் பகிர்ந்த விஷயம்.

0
261
- Advertisement -

நடிகர் மணிகண்டன் ‘ஜெய் பீம்’ படம் குறித்து சமீபத்தில் பேட்டியில் பகிர்ந்து இருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நாயகனாக திகழ்பவர் மணிகண்டன். ரேடியோ ஜாக்கியாக மீடியாவுக்குள் நுழைந்தார். பின் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோவில் மிமிக்ரி கலைஞனாக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் மணிகண்டன். பின் இவருக்கு சினிமாவில் டப்பிங் தொழில் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர்களுக்கு டப்பிங் பேசி இருக்கிறார் மணிகண்டன்.

-விளம்பரம்-

மேலும், 20க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலமாக இயக்குனர் நலன் குமாரசாமியின் அறிமுகம் மணிகண்டனுக்கு கிடைத்தது. அதன் மூலம் அவர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் சிறு வேடத்தில் நடித்தார் மணிகண்டன். அதைத் தொடர்ந்து பல படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்த மணிகண்டனுக்கு சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘ஜெய் பீம்’ .படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடித்ததன் மூலம் மணிகண்டனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அங்கீகாரம் கிடைத்தது என்றே சொல்லலாம்.

- Advertisement -

குடும்பஸ்தன் படம்:

தற்போது இவர் நடிப்பில் ‘ குடும்பஸ்தன்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்தப் படத்தின் பிரமோஷன் தொடர்பாக நடிகர் மணிகண்டன் பல்வேறு ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் நடித்த ‘ஜெய்பீம்’ படம் குறித்து மணிகண்டன் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில், ஒரு நாள் ஞானவேல் சார் என்கிட்ட மூணு மணி நேரம் ஃப்ரீயா இருப்பீங்களான்னு கேட்டு, ‘ஜெய் பீம்’ படத்தோட கதையை சொன்னார். நான் எதுக்கு கதை என்கிட்ட சொல்றீங்கன்னு கேட்ட உடனே, இடையில் ஹியூமராக எழுதி தர முடியுமான்னு கேட்டார். நானும் பண்றேன்னு ஒத்துக்கிட்டேன்.

மணிகண்டன் பேட்டி:

மேலும், அவர்கிட்ட ஸ்கிரிப்டை தர முடியுமான்னு கேட்டு வாங்கிட்டு போய் முழுசா படித்தேன். எங்கம்மா திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவங்க தான் என்பதால், அந்த வட்டார வழக்கு படத்தில் இருந்தது. நான் என் அம்மாவிடம் கேட்டு சில விடுகதை எல்லாம் அதில் சேர்த்தேன். அதெல்லாம் ஞானவேல் சாருக்கு பிடித்திருந்தது. அடுத்து ஒரு இரண்டு வாரம் கதையை டிஸ்கஸ் செய்து முடித்து விட்டோம். அப்பதான் ராஜக்கண்ணு கேரக்டர் யார் பண்ணா நல்லா இருக்கும்னு என்னிடம் ஞானவேல் சார் சாய்ஸ் கேட்டார்.

-விளம்பரம்-

நீங்கதான் நடிக்கணும்னு சொல்லிட்டாரு:

அதற்கு நான் என்னைத் தவிர, நான்கைந்து நடிகர்களோட பெயரைச் சொன்னேன். அதற்கு அவர் அவங்க எல்லாம் இருக்கட்டும், உங்களுக்கு ஓகே வா என்று கேட்டார். நான் எப்படி சார்னு முதலில் தயங்கினேன். அதற்கு அவர் நீங்க அந்த சீனை படித்து காட்டிய விதம் நல்லா இருந்துச்சு அதனால்தான் என்றார். அதற்கு நான் இந்த வாய்ப்பினை வாங்கணும்னு நான் படிக்கல சார்னு என்று சொன்னேன். அதற்கு, படிச்சுக்காட்டியதில் நீங்க பண்ணீங்கன்னா நல்லா இருக்கும்னு தோணுது என்றார்.

நயன்தாரா மேம் செய்த உதவி:

மேலும், அப்போதுதான் நான் நயன்தாரா மேம் கூட, ‘நெற்றிக்கண்’ படம் பண்ணிட்டு இருக்கேன் என்று சொன்னேன். அதற்கு ஞானவேல் சார் ஒரு 20 நாள் மட்டும் பேசி வாங்கி தரீங்களா என்று கேட்டார். இதை நான் நயன்தாரா மேம் கிட்ட சொல்ல, அவங்களும் ஓகே நானும் இன்னொரு படத்தில் நடிச்சிட்டு வந்துடறேன் என்று சொன்னாங்க. அந்த கேப்பில் நான் நடிச்ச படம் தான் ஜெய் பீம். சில படங்கள் எடுக்கும் போதே தெரிந்துவிடும். அதுபோல்தான் ஜெய் பீம் எடுக்கப் போறோம் என்கிற முதல் நாளே இது வேறு ஒன்றாக இருக்கப் போகுதுன்னு தெரிஞ்சது என்று மணிகண்டன் பகிர்ந்திருக்கிறார்.

Advertisement