தீவிர சிவ பக்தன் – சிவராத்திரியில் சிவனடி சேர்ந்த நடிகர் மயில்சாமி. சோகத்தில் மூழ்கிய குடும்பம்.

0
590
mayilsamy
- Advertisement -

பிரபல காமெடி நடிகர் மயில்சாமி திடீர் மரணம் அடைந்திருக்கும் சம்பவம் திரைத்துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் வெறும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.தமிழ் சினிமா கலைவாணர் முதல் தற்போது சந்தானம், சூரி வரை காமெடிக்கு பஞ்சம் இல்லாத படங்களை கொடுத்து வருகிறது. காலத்திற்கு பல காமெடி நடிகர்கள் வந்து முத்திரை பதித்து வருகின்றனர். காமெடி நடிகர்கள் என்றதும் நம் நினைவிற்கு வருவது கவுண்டமணி செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம் என்று இவர்கள் தான் நினைவிற்கு வரும்.

-விளம்பரம்-

இதில் மயில்சாமிக்கு நிச்சயம் ஒரு தனி இடம் உண்டு. நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களை கொண்டவர்.1985 ஆம் ஆண்டு கன்னிராசி படத்திலும் டெலிவரி பாய் வேடத்தில் நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் கமல் விஜயகாந்த் சத்யராஜ் என்று பல நடிகர்களை தொடர்ந்து இன்றைய தலைமுறை நடிகர்களான விஜய் அஜித் விக்ரம் சூர்யா விஷால் என்று பல நடிகர்களின் படத்திலும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இதுவரை இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் இறுதியாக உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி மற்றும் ஆரிய பாலாஜி நடித்த வீட்ல விசேஷங்க போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால், சமீப காலமாக இவரை அதிக படங்களில் காண முடியவில்லை. நடிகராக மட்டுமில்லாமல் இவர் தீவிர அரசியல்வாதியும் ஆவர். ஜெயலலிதாவின் மரணத்துக்கு முன்பு வரை அ.தி.மு.க-வில் இருந்ததார் நடிகர் மயில்சாமி.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.கவிலிருந்து ஒதுங்கி அமைதியாக இருந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார் மயில்சாமி. ஆனால், இவர் போட்டியிட்ட தொகுதியில் மயில்சாமிக்கு 1,435 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.தோல்விக்கு பின் பேசிய மயில்சாமி, 1,435 பேர் என்னைத் தேடி வாக்களித்திருக்கிறார்கள். என் பெயர் இரண்டாவது வாக்குப் பெட்டியில் கடைசியிலிருந்தது.

-விளம்பரம்-

ஆனாலும் 1,435 பேரும் என்னைத் தேடி வாக்களிச்சிருக்காங்கன்னா அது எவ்வளவு பெரிய விஷயம்? உண்மையிலேயே சந்தோஷப்படுகிறேன். விஜயகாந்த்தின் தே.மு.தி.க கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளருக்கே எனக்குச் சமமான வாக்குகள்தான் விழுந்திருக்கு. அப்படியிருக்கும்போது எந்தக் கட்சியையும் சாராமல் சுயேச்சையாகப் போட்டியிட்ட எனக்குச் சந்தோஷம்தான் என்று கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் நேற்று இரவு மயில்சாமி மாரடைப்பால் காலமாக இருக்கிறார். நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது அவருக்கு திடீர் மரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து இருக்கிறது. ஏற்கனவே இவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தது கடந்த டிசம்பர் மாதமே இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மயிலசாமி தீவிர சிவ பக்தர், இவர் ஒவ்வொரு கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலைக்கு சென்று சிவனை வழிபடுவதும் வழக்கம், தீவிர சிவ பக்தரான இவர் நேற்று சிவராத்திரி தினத்தில் சிவனடி சேர்ந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement