முதல் மூன்று படங்கள் ஹிட் கொடுத்த முதல் நடிகர், ஒரே ஆண்டில் அதிக படங்கள் நடித்த நடிகர் – மோகன் பற்றிய 11 சுவாரசிய விஷயங்கள்.

0
233
- Advertisement -

தமிழ் சினிமாவில் ரஜினி ,கமல், விஜயகாந்த் என்று பல முன்னாடி நடிகர்கள் பட்டைய கிளப்பி கொண்டு இருந்த கால கட்டத்தில் இவர்களுக்கு எல்லாம் செம்ம காம்படீசன் கொடுத்தவர் நடிகர் மோகன். 80களில் இவரது நடிப்பின் மூலம் தனெக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். ஒரு நாளிற்கு 18 மணி நேரம் நடிப்பிலேய நேரத்தை செலவிட்டார். நடிகர் மோகன் கிட்டத்தட்ட 70 படங்களுக்குப் மேல் நடித்து தூள் கிளப்பியவர். இப்படி ஒரு நிலையில் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை பார்க்கலாம்.

-விளம்பரம்-
  1. மோகன், தமிழில் நடித்த முதல் மூன்று படங்களுமே ( மூடுபனி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கிளிஞ்சல்கள்) சூப்பர் ஹிட்டானவை. இந்த அதிர்ஷ்டவாய்ப்பு, தமிழில் இதுவரை எந்த நடிகருக்கும் வாய்த்ததே இல்லை.
  2. இளையராஜாவின் 100 வது படமான மூடுபனி, 300 வது படமான உதயகீதம் இரண்டுமே மோகன் நடித்த படங்களாகும். இந்திய திரையுலக வரலாற்றிலேயே, ஒரு இசையமைப்பாளருக்கு, ரசிகர்கள் கட்அவுட் வைத்த பெருமைக்குரிய முதல்படமான பயணங்கள் முடிவதில்லை படமும் மோகன் படம்தான். அந்த இசையமைப்பாளர் இளையராஜாதான்.
  3. .ஒரே ஆண்டில் அதிகபடங்களில் நடித்த சாதனையைப் புரிந்துள்ள மிகச்சில தமிழ் நாயக நடிகர்களுள் மோகனும் ஒருவர்.
  1. மிக பிரபலமான கதாநாயகனாக விளங்கியபோதே, கதாநாயகிக்கே அதிக முக்கியத்துவமளிக்கும் வகையிலான கதைகொண்ட படங்களிலும் அதிகளவில் நடித்து, வெற்றியும், புகழும் தேடிக்கொண்ட நடிகர்களுள் மோகனும் ஒருவர்.
  2. மோகன், தன் சொந்தக்குரலில் பேசி நடித்த முதல் தமிழ்ப்படம்” பாசப்பறவைகள்”. மோகனுடைய அசல்குரல், ரசிகர்களைச் சுத்தமாகக் கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  3. மோகனை, கோகிலா மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் பாலுமகேந்திரா. ஆனால் அவருடைய இயக்கத்தில், முழுநீள கதாநாயகனாக, மோகன் ஒரேஒருபடத்தில் மட்டுமே நடித்துள்ளார். அப்படம், “ரெட்டைவால் குருவி”. கால்ஷீட் விஷயத்தில் குளறுபடி செய்யாத மோகன், சம்பள விஷயத்தில் மிகவும் கறாரான பேர்வழியாவார்.
  1. இவர் ஒரு படத்தில் நடித்தாலே, அப்படம் மினிமம் வசூல் கியாரண்டி என்ற நிலை நிலவியதால், இவர், முழுபடத்தில் நடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை; கௌரவ வேடத்திலாவது தம் படங்களில் நடித்தால் போதுமென தயாரிப்பாளர்கள் விரும்பினர். மோகனும், அதற்கேற்ப, கௌரவ வேடங்களிலும் சில படங்கள் நடித்துக் கொடுத்தார்.
  2. மோகன் நடித்த ஒரு தமிழ் படத்தில், பின்னணி பாடலொன்றை, கமல் பாடியுள்ளார் என்ற விபரம், பலரும் அறியாதது. “ஓ மானே! மானே!” என்ற படத்தில் இடம்பெற்ற “பொன்மானை தேடுதே!” என்ற பாடலை, கமல் பாடியுள்ளார்.
  3. திரையுலக மறுபிரவேசத்திலும், கதாநாயகனாகவே நடிக்க விரும்பிய மோகன், தன்னைத்தேடிவந்த பல பட வாய்ப்புகளை நிராகரித்தார்.
  4. “அன்புள்ள காதலுக்கு” என்ற ஒரே ஒரு படத்தை மட்டும் சொந்தமாக இயக்கி, தயாரித்து, நடித்துள்ளார் மோகன். இப்படம் படுதோல்வியடைந்தது.
  5. மோகனைப் போல, தொடர் ஹிட் படங்களைக் கொடுத்த தமிழ் நடிகருமில்லை; தொடர் மெகா பிளாஃப் படங்களைக் கொடுத்த தமிழ் நடிகருமில்லை.
Advertisement