திருமணம் ஆகி 15 ஆண்டுகள் கழித்த பிறந்த மகனுக்கு தடபுடலாக பெயர் சூட்டு விழா நடத்திய நரேன் – இதான் மகன் பெயராம்.

0
482
narean
- Advertisement -

விக்ரம் பட நடிகர் 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தந்தையான நிலையில் தற்போது தனது மகனுக்கு பெயர் சூட்டி இருக்கிறார் பிரபல மலையாள நடிகர் நரேன். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் இறுதியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் படத்தை இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருந்தது.

- Advertisement -

விக்ரம் படம்:

இதனால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், படத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலால் கமலின் மகன் கொல்லப்படுகிறான். இதை அறிந்த கமல் தன் மகனைக் கொன்றவர்களைத் பழிவாங்க செல்கிறார். பின் அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமே படத்தின் கதை.

விக்ரம் படத்தில் நரேன்:

விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. இந்த படம் பான் இந்திய படமாக கொண்டாடப்பட்டு இருக்கிறது. மேலும், படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் ஞாபகம் வைத்துக்கொள்ளும் வகையில் லோகேஷ் கனகராஜ் செதுக்கி இருக்கிறார். அந்த வகையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் நரேன்.

-விளம்பரம்-

நரேன் மனைவி மற்றும் மகள் :

இவர் மிஸ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் நடிகராக அறிமுகமாக இருந்தார்.அதனை தொடர்ந்து இவர் பள்ளிக்கூடம், அஞ்சாதே, நெஞ்சிருக்கும் வரை, தம்பிக்கோட்டை,கைதி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழி படங்களில் மட்டும் இல்லாமல் மலையாள மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். அதோடு இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லன் கதாபாத்திரங்களும் மிரட்டி இருக்கிறார்.

சமீபத்தில் பிறந்த மகன் :

இதனிடையே நடிகர் நரேன் அவர்கள் 2007 ஆம் ஆண்டு மஞ்சு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளனியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இந்த தம்பதிக்கு தன்மியா என்ற மகள் இருக்கிறார். தற்போது இவருக்கு 14 வயது ஆகிறது. சமீபத்தில் கூட நரேன் தன்னுடைய 15 வது திருமண நாளை கொண்டாடி இருந்தார்.இவருக்கு 14 வயதில் மகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தன் மகனுக்கு ஓம்கார் என்று பெயர் வைத்து இருக்கிறார்.

Advertisement