ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பற்றி நாசர் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல பவரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த படம் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.
இந்த படத்தை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்தார். மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து தற்போது நடிகர் சூர்யா அவர்கள் ரெட்ரோ படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2D மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது.
சூர்யா திரைப்பயணம்:
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், பிரகாஷ் ராஜ், நந்திதா தாஸ் உட்பட பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் அடுத்த ஆண்டு மே 1 கோடை விடுமுறையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ரெட்ரோ படம்:
சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான கனிமா பாடல் ரசிகர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் ரெட்ரோ படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது. இதில் பட குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய நாசர், நான் எத்தனையோ பட விழாக்களுக்கு போயிருக்கேன். ஆனால், இந்த விழாவை என்னுடைய சொந்த நிகழ்வாக பார்க்கிறேன்.
விழாவில் நாசர் சொன்னது:
சூர்யாவை அவருடைய முதல் படத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். முதலில் கள்ள கபடம் இல்லாத ஒரு சுத்தமான மனிதர். எடுத்துக் கொண்ட வேலையை சிறப்பாக செய்வதற்காக எல்லாத்தையும் விட்டுக் கொடுக்கிற நடிகர். இந்த படத்தில் ஏன்டா டூப் வச்சுக்க கூடாதா என்று நான் கோபமாகவே சூர்யாவிடம் சண்டை போட்டேன். அந்த அளவுக்கு அவர் இந்த படத்திற்காக ரிஸ்க் எடுத்து இருந்தார். தன்னால் முடியாத போது மட்டும் தான் டூப் வச்சிப்பேன் என்றும் சொன்னார். இந்த படம் நடக்கும்போது சூர்யாவுக்கு தலையில் அடிபட்டு இருந்தது. ஆனால், கொஞ்ச நாள் மட்டும் தான் அவர் ஓய்வெடுத்து இருந்தார்.
சூர்யா பற்றி சொன்னது:
உடனடியாகவே படப்பிடிக்கு வந்து விட்டார். சூர்யா நீ உன் குடும்பத்துக்கு மட்டும் சொந்தம் கிடையாது. நீ நல்ல நடிகனுக்கு பெயர் எடுத்து விட்டாய். அப்போதே நீ எங்களுக்கு சொந்தம் ஆகிவிட்டாய். மேலும், இந்த படத்தில் நல்லா நடித்திருக்கிறேன் என்று மற்றவர்கள் சொன்னதை தாண்டி நான் நல்லாடி நடித்திருக்கிறேன் என்று எனக்கே தோன்றுகிறது. சந்தோஷ் நாராயணன் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும். நன்றாக சிறப்பான இசை கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார் என்று கூறி இருக்கிறார்.