விஜய் டிவியில் பல வித்யாசமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி உள்ளது. அதில் மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்றது ‘கலக்கப்போவது யாரு’ என்னும் காமெடி நிகழ்ச்சி. விஜய் டிவியில் வெற்றிகரமாக 7 சீசன்களை கடந்து சென்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர் ஒருவர் இரண்டாம் திருமணம் செய்விருந்ததால் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் மிமிக்ரி, ஸ்டாண்ட் ஆப் காமெடி என்று பல்வேறு திறமைகள் கொண்ட கலைஞர்கள் பங்குபெற்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சின் 5 வது சீசனில் போட்டியாளராக பங்குபெற்றவர் தான் மிமிக்ரி ஆர்டிஸ்ட் நவீன். இந்த சீசனில் தனது பல தரப்பட்ட குரல் திறமையால் பல்வேறு பிரபலங்களின் குரலை மிமிக்ரி செய்து அசத்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். அந்த சீசனில் பட்டத்தை வென்றிடாத போதும் மக்கள் மனதில் நிலைத்து நின்றார் நவீன்
கடந்த சில காலமாக நவீன் மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவருடன் நெருக்கத்தில் இருந்து வந்தார். அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது, டப் ஸ்மாஷ் வீடியோ வெளியிடுவது என்று இருந்து வந்தார் நவீன். இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று (ஜூன் 10 ) திருமணம் செய்துகொள்ள இருந்து நிலையில், இவர்களது திருமணம் நிறுத்தப்பட்டு நவீன் காவல் துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார்.
இதற்கு பின்னணி என்னவெனில் நவீன் ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு திவ்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நவீன் வேறொரு திருமணம் செய்த்துள்ள இருந்த தகவளை அறிந்த திவ்யா,காவல் நிலையத்தில், தனக்கும் நவினுக்கும் திருமணமான ஆவணங்களை காட்டி புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில் இன்று நடக்கவிருந்த நவினின் திருமண வரவேற்பை நிறுத்தி அவரை கைது செய்துள்ளது காவல் துறை.