கேப்டனை பார்த்தால் செத்து விடுவேன், பொன்னம்பலத்தின் உருக்கமான பேட்டி. என்ன காரணம் பாருங்க.

0
653
- Advertisement -

தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பொன்னம்பலம் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் பொன்னம்பலம். இவர் தமிழ் சினிமாவில் ஒரு சண்டை கலைஞராக தான் வந்தார். பின்னர் இவர் சண்டை பயிற்சியாளர் ஆனார். அதன் பின் இவர் படங்களில் நடிக்க தொடங்கினார். பின் தமிழ் சினிமாவில் இவர் சிறந்த வில்லன் என்று பெயர் எடுத்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிகர், இயக்குனர், ஹீரோ, நகைசுவை என்று பல அவதாரம் எடுத்து வெற்றி கண்டவர். தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் அஜித் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்திலும் நடித்து இருக்கிறார். அதோடு தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் வில்லன் நடித்து இருந்தார் பொன்னம்பலம் . இப்படி ஒரு நிலையில் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.

- Advertisement -

உடல்நிலை பாதிக்கப்பட்ட பொன்னம்பலம்:

பின் அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது சிகிச்சைக்கு திரு கமல்ஹாசன் உதவிசெய்து இருந்தார். பின் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. சிகிச்சைக்கு பின் அவர் குணமாகி வீடு திரும்பி இருக்கிறார். மேலும், இவர் உடல்நிலை சரியில்லாதபோது ரஜினி, சரத்குமார், சிரஞ்சீவி என பல பிரபலங்கள் உதவி செய்து இருந்தார்கள். தற்போது பொன்னம்பலம் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறார்.

பொன்னம்பலம் அளித்த பேட்டி:

சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் இருந்த பொன்னம்பலம் தற்போது நலமுடன் இருக்கிறார். இந்நிலையில் தனக்கு உடல்நிலை சரியில்லாத போது உதவிய சினிமா பிரபலங்கள் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளிக்கிறார் பொன்னம்பலம். அதில் அவர் கூறியிருந்தது, விஜயகாந்த் எனக்கு கடவுள் போல். அவரை நான் இன்னும் நேராக சென்று பார்க்கவில்லை. அவரை நேரில் பார்த்தால் செத்துவிடுவேன்.

-விளம்பரம்-

விஜயகாந்த் குறித்து சொன்னது:

எனக்கு கொஞ்ச நாளாக இதயநோய், சிறுநீரக நோய் பிரச்சனை இருக்கு. அவரைப் பார்த்தால் என் மனம் தாங்காது. ஒருத்தர் மேல பாசம் வைத்து விட்டு அதுவும் அளவுகடந்த பாசம் வைத்து விட்டால் அவர் உடல் நிலை மோசமாக இருக்கும்போது பார்க்க முடியாது. அதனால் தான் நான் இதுவரை விஜயகாந்தை நேரில் பார்க்கவில்லை. அவர் இப்போ நல்ல உடல் நலத்தோடு இருந்திருந்தால் அவர் தான் எனக்கு முதல் நபராக உதவி இருப்பார். அதேபோல் பல மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்காமல் இருந்தேன். சரத்குமார் தான் எனக்கு என் வீட்டு வாடகையை கட்டினார்.

தனுஷ் குறித்து சொன்னது:

பிரகாஷ்ராஜுக்கு ஒரு போன் செய்தேன் 2 லட்சம் கொடுத்தார். சிரஞ்சீவி ஐயா ஒரு பெரிய மனிதர். எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதை அறிந்து இரண்டு லட்ச ரூபாயை அனுப்பியதுடன் ஆறுதல் கூறி ஆடியோ மெஸேஜ் அனுப்பினார். சரியான நேரத்தில் எனக்கு உதவி செய்தவர் தனுஷ். அவர் என் மானத்தைக் காப்பாற்றினார். எனக்கு உதவிய அனைவரையும் நான் மகான் என்று தான் சொல்லுவேன். கஷ்ட நேரத்தில் எனக்கு பல பிரபலங்கள் உதவி செய்து இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement