ஏமாற்றிய பாகுபலி நடிகர் பிரபாஸ்..! பல கோடி மதிப்புள்ள வீட்டிற்கு சீல்..!காரணம் இது தான்..!

0
1273
Prabas
- Advertisement -

பாகுபலி படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமடைந்தவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோகளில் ஒருவராகவிட்டார்.

-விளம்பரம்-

தற்போது சாஹோ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுகு என்று இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படத்தையடுத்து பல்வேறு படங்களிலும் கமிட்டாகிவிட்டார்.

- Advertisement -

இந்நிலையில் தெலுங்கானாவில் உள்ள அவரது கெஸ்ட் ஹவுஸை அரசு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். ரயாதுர்காம் பகுதியில் 83 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானதாம். இந்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக நீதிமன்ற வழக்கு நடைபெற்று வந்துள்ளது.

பல கோடி மதிப்பிலான இந்த வீட்டின் தீர்ப்பு அரசுக்கு சாதகமாக வந்துள்ளது. அரசுக்கு சொந்தமான அந்த இடத்தில் பிரபாஸின் வீடும் அடங்கியுள்ளதாம் இதனால் அந்த வீட்டிற்கு சீல் வைத்துவிட்டார்களாம்.

-விளம்பரம்-
Advertisement