பிரபலங்கள் சிலர் தங்களது குடும்ப நபர்களையோ பிள்ளைகளையோ அவ்வளவாக வெளியே காட்டிக்கொள்வது இல்லை .அந்த வருசையில் நடன புயல் பிரபுதேவா விற்கு எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள் அவரது உண்மையான மனைவி யார் என்று பலருக்கும் தெரியாது.
பிரபுதேவா 1995 இல் ராம்லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா ,ஆதி த் தேவா என்று 3 மகன்கள் பிறந்தனர். இதில் பிரபுதேவாவின் மூத்த மகனான விஷால் தனது 12 வயதில் 2008 இல் காலமானார்.
அவருக்கு மூளை கட்டி எனப்படும் ப்ரயின் டுயூமெர்(brain tumour) இருந்ததால் 6 மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடிகர் பிரபுதேவா தனது பிள்ளைகளை அவ்வளவாக வெளியில் அழைத்து வருவது இல்லை. மேலும் ஒரு சில நடிகர்கள் தங்களது வாரிசுகளை சிறு வயத்திலேயே சினிமாவில் அறிமுகம் செய்துவிடுகின்றனர். ஆனால் ஒரு மிகப்பெரிய நடன கலைஞராக இருந்தும் கூட தனது மகன்களில் ஒருவரயும் ஒரு பாடலில் கூட நடனமாட வைத்துள்ளாதது மிகப்பெரிய ஆச்சர்யம் தான்.