தமிழ் சினிமாவின் சின்னத்திரையில் பல ஆண்டுகாலம் இழுத்து கொண்டிருக்கும் சீரியல் சரவணன் மீனாட்சி. சீரியல் அடிக்கடி செம்ம போர் அடித்தாலும் அவ்வப்போது ஏதாவது ஒரு ட்விஸ்டை உள்ளே வைத்து சீரியலை மும்மூரமாகி விடுகின்றனர். மேலும், ஆண்டாண்டு காலமாக சரவணன் மாறிக்கொண்டே வருகிறார் ஆனால் மீனாட்சி மட்டும் அப்படியே இருக்கிறார் என்ற ஒரு நெருடலான விமர்சனம் இந்த சீரியலின் முன் வைக்கப்படுவது உண்டு.
இருந்தும் இது போன்ற சீரியலை மக்கள் தங்களின் அன்றாட வாழ்கையின் ஒரு பாத்திரமாகவே கருதுகின்றனர். அதே போல், ராஜா ராணி என்ற ஒரு சீரியல் கடந்த சில மாதங்களாக அதே சேனனில் ஒளிபரப்பட்டு வருகிறது. இந்த சீரியல் சற்று வித்யாசம் காட்டுகிறது. ஆனால் ஒரு வித கொடுமை மற்றும் சென்டிமென்ட் ஆகியவற்றில் அனைத்து சீரியல்களுடனும் இதுவும் ஒத்துப் போகிறது.
இந்த இரண்டு சீரியல்களிலும் முதலில் நடிக்க கேட்கப்பட்டவர் பிரஜன். இவருக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தால் முதலில் தொகுப்பாளராக இருந்துள்ளார். ஆனால், இந்த இரண்டு நாடகத்தின் கதைகளை கூறும் போது வேண்டாம் என்று கூறிவிட்டார். அதன் பின்னர் தான் ரியோவிற்க்கும், சஞ்சீவிற்கும் கை மாறியது. இருவரும் தங்கள் சீரியல்களில் செம்மையாக நடித்து வருகின்றனர்.
ஆனால் முதலில் இந்த கதைகளை ஸ்ரீஜனிடம் கூறிய போது வேண்டாம் என்று கூறியுள்ளார். தற்போது அதே டீவியில் ஒளிபரப்பப்படும் சின்னத்தம்பி என்ற சீரியலில் நடித்து வருகிறார். கேட்டால், இந்த கதை பிடித்தது அதனால் நடிக்கிறேன் என்று அசால்ட்டாக பதில் கோனார் ஸ்ரீஜன்.