வைதேகி காத்திருந்தாள் சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரஜன் – இது தான் காரணமாம்.

0
1519
prajin
- Advertisement -

கொரோனா தொடங்கிய காலத்திலிருந்தே மக்கள் அதிகம் சின்னத்திரையை விரும்பி பார்த்து வருகிறார்கள். இதற்காக ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரஜின். இவர் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த டிஷூம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சா பூ திரி, மணல் நகரம், பழைய வண்ணார் பேட்டை, ஆண்தேவதை போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

கடைசியாக இவர் மலையாளத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து இருந்த லவ் ஆக்சன் டிராமா என்ற படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இப்படி என்னதான் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது சின்னத்திரை சீரியல்கள் தான். இவர் 2005ஆம் ஆண்டு வெளிவந்த இது ஒரு காதல் கதை என்ற சிறிய மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ப்ரஜின் பெண், அஞ்சலி, காதலிக்க நேரமில்லை, கோகுலத்தில் சீதை போன்ற பல தொடர்களில் நடித்து இருந்தார்.

- Advertisement -

ப்ரஜின் நடித்த சீரியல்கள்:

பின் சிறிது காலம் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றவுடன் மீடியாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டிருந்தார். பின் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சின்ன தம்பி என்ற சீரியலின் மூலம் மீண்டும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு தான் இந்த சீரியல் முடிவடைந்தது. தற்போது இவர் வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலில் நடிக்கிறார். கடந்த மாதம் தான் இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டது.

வைதேகி காத்திருந்தாள் சீரியல்:

மேலும், இந்த சீரியல் வெளியாகி சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் ஆதரவு பெற்று வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக சரண்யா நடித்து வருகிறார். மாறுபட்ட கதைக்களம் கதை கொண்ட இந்த சீரியல் மக்களின் மத்தியில் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து ப்ரஜின் விலகி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ப்ரஜின் கூறியிருப்பது, சீரியலில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று எண்ணி தான் கமிட்டானேன். ஆனால், பட வாய்ப்புகள் பல வந்து இருக்கிறது. அதனால் சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

வைதேகி காத்திருந்தாள் சீரியலில் இருந்து விலகிய ப்ரஜின்:

இந்த படங்கள் ஏற்கனவே கமிட் ஆனவை என்பதால் சீரியல் மற்றும் படங்களின் படப்பிடிப்பிற்கு தேதி கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் சீரியல் இருந்து விலக இருக்கிறேன். வேறு வழியில்லாமல் சீரியல் குழுவிடம் இந்த விஷயத்தை அப்படியே சுமுகமாக சொல்லிவிட்டு தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் வைதேகி காத்திருந்தாள் சீரியல் நல்ல ப்ராஜெக்ட். உடன் வேலை செய்த அனைவருமே நன்றாக பழகினார்கள். ஜாலியான யூனிட் ஆனாலும் என்னால் இதில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

சீரியலில் விலகியதற்கு விளக்கம் கொடுத்த ப்ரஜின்:

இப்படி இந்த சீரியல் தொடங்கி ஒரே மாதத்தில் ஹீரோ விலகி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சொல்லப்போனால் இந்த சீரியலை பிரஜினுக்காக தான் பலரும் பார்க்க தொடங்கினார்கள். அதோடு ப்ரஜின் நடித்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள்? என ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வருகின்றனர். மேலும், பிரஜின் சினிமா துறையில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று தான் பல முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார். தற்போது அதற்கான வாய்ப்புகள் வந்து இருப்பதால் ரசிகர்கள் பலரும் பிரஜினுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Advertisement