திருமணத்தால் நடிப்பை விட்டேன், மகன் இறப்பு – பிரகாஷ் ராஜ்ஜின் முன்னாள் மனைவி சந்தித்த கஷ்டங்கள் – அட, இந்த நடிகையின் தங்கையா இவர்.

0
995
prakshraj
- Advertisement -

பிரகாஷ் ராஜ் குறித்து நடிகை லலிதா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் லலிதா குமாரி. இவர் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர் சி. எல். ஆனந்தனின் மகளும், நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை என்பது குறிப்பிடதக்கது. இவர் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் வீடு மனைவி மக்கள், புதுப்புது அர்த்தங்கள், புலன்விசாரணை, உலகம் பிறந்தது எனக்காக போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி இவர் இதுவரை 35 படங்களுக்கு மேல் நடித்து இருந்தார். பின் இவர் 1994 ஆம் ஆண்டு நடிகர் பிரகாஷ் ராஜைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூஜா, மேக்னா என மகள்களும், சித்து என்ற மகனும் பிறந்தார்கள். ஆனால், 2004 ஆம் ஆண்டு இவர்களுடைய மகன் சித்து இறந்து விட்டார். அதன் பின் லலிதா குமாரிக்கும்,பிரகாஷ் ராஜுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2009 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின் நடிகை லலிதா குமாரி அவர்கள் சினிமா விட்டு விலகி தன்னுடைய குடும்பத்தை பார்த்து கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

- Advertisement -

சினிமாவிற்கு வந்த காரணம் :

பின் இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான தறி என்ற தொடரை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளர் ஆனார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை லலிதா அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, நான் விருப்பப்பட்டுதான் மீடியாவிற்குள் வந்தேன். என்னுடைய அப்பா நடிகர், அதேபோல் என்னுடைய அக்காவும் நடிகை. நானும் விருப்பப்பட்டு தான் நடிகை ஆனேன். எனக்கு பிடித்த படங்களாக இருந்தால் மட்டுமே நான் நடிப்பேன்.

அக்கா டிஸ்கோ ஷாந்தி :

வீட்டிலும் நான் நடிக்க மாட்டேன் என்றால் என்னை கட்டாயப் படுத்தியது கிடையாது. என்னுடைய அப்பா அம்மாவுக்கு அடுத்து நான் கடமைப்பட்டு இருப்பது என்னுடைய அக்காவிற்கு தான். அவர் எங்களுக்காகவே வாழ்க்கையை தியாகம் செய்தார் என்று சொல்லலாம். பின் எனக்கு திருமணம் ஆனது. திருமணத்திற்கு பிறகு குடும்பம், குழந்தை என்ற பொறுப்பு எனக்கு வந்தது. அதனால் நான் சினிமாவை விட்டு விலகினேன். பிரகாஷ்ராஜும் நானும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் பிரிந்தோம்.

-விளம்பரம்-

பிரகாஷ்ராஜ் குறித்து :

பிரிந்தும் பிரகாஷ்ராஜ் என்னுடைய குழந்தைகளை நன்றாக தான் பார்த்தார். இன்றும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். அவர்களுடைய படிப்பு எதுவென்றாலும் அவர் செய்து கொண்டிருக்கிறார். எனக்கு வெளியே செல்ல வேண்டும் என்று ஒரு மெசேஜ் பண்ணினால் போதும் குழந்தைகளைக் கொண்டு வந்து என்னிடம் விடு, நீ போயிட்டு வா என்று சொல்லுவார். அவர் என்னையும் குழந்தைகளையும் நன்றாக தான் கவனித்துக் கொண்டு இருக்கின்றார். எனக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள்.

இறந்து போன மகன் :

அதில் மகன் தவறிவிட்டான். இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். பெரியவள் ஸ்கிரிப்ட் ரைட்டிங் படித்துக் கொண்டிருக்கிறார். இளையவள் ஏ ஆர் ரகுமான் இசை பள்ளியில் சிங்கர் பயிற்சி பாடகராக பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார். தற்போது என்னுடைய பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். இனி படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் நடிக்கலாம் என்று இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement