தமிழ் சினிமாவில் பிரேசத் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தவர். அப்போதே சாக்லேட் பாய் என்று பெண் ரசிகர்கள் அதிகம் கொண்ட நடிகராக இருந்து வந்தார்.
நடிகர் பிரேஷாந்த் இருந்தால் தான் ஒரு சில வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கு ரசிகர் கூட்டமே வரும்.அந்த அளவிற்கு புகழின் உச்சத்தில் இருந்த பிரஷாந்த் கிரகலட்சுமி என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணத்திற்கு பின்னர் எந்த ஒரு படங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை அனைத்தும் தோல்வி படங்களாகவே அமைந்தது.சில ஆண்டுகள் கழித்து இவர்களுக்கு இருந்த ஒரு சில கருத்து வேறுபாட்டால் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடந்துவிட்டது.
தற்போது பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் தி நகரில் உள்ள கிரகலட்சுமி வீட்டில் மர்ம நபர்கள் சிலரால் கொள்ளையடிக்கபட்டுள்ளது. கொள்ளையில் 170 சவரன் தங்க நகைகள் பரிபோனதாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் கிரகலட்சுமி.




