என் அப்பாவால தான் எனக்கு சினிமால வாய்ப்பு கிடைச்சது – பிரித்விராஜின் ஓபன் பேச்சுக்கு ரசிகர்கள் பாராட்டு

0
132
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரித்விராஜ். இவர் மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகர் ஆவார். இவருடைய தந்தை சுகுமாரன். இவர் மலையாளத்தில் பிரபல நடிகர் ஆவார். அதேபோல் தாயார் மல்லிகா சுகுமாரன் பிரபலமான நடிகை. இவருக்கு இந்திரஜித் சுகுமார் என்ற மூத்த மகன் இருக்கிறார். இவரும் மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருடைய மனைவி பூர்ணிமா இந்திரஜித்.

-விளம்பரம்-

இவரும் சில மலையாள தமிழ் படங்கள், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் இவர்களுடைய இரண்டாவது மகன் பிரித்விராஜ் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் 2002 ஆம் ஆண்டு நந்தனம் என்ற மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

- Advertisement -

பிரித்திவிராஜ் திரைப்பயணம்:

அதன் பின் இவர் தமிழில் கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், காவியத் தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். அதற்கு பிறகு இவருக்கு தமிழ் மொழியில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின் இவர் மலையாள மொழியில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவர் ஆகஸ்ட் சினிமா என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றார்.

பிரித்திவிராஜ் பேட்டி:

கடைசியாக இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த படம் சலார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்த படத்தில் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து இவர் சில படங்களில் கமிட் ஆகி நடித்த வருகிறார். இந்த நிலையில் பிரித்திவிராஜ் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நான் சினிமாவில் நடிகராக இருப்பதற்கு காரணம் என்னுடைய அப்பா தான்.

-விளம்பரம்-

சினிமா வாய்ப்பு குறித்து சொன்னது:

அவருடைய பெயரால் தான் நான் நடிகர் ஆனேன். என்னுடைய அப்பாவும் பிர பிரபலமான நடிகர். அவர் மூலம் தான் எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இது மறுக்க முடியாத உண்மை. எவ்வளவோ பேர் எவ்வளவோ திறமைகளை வைத்து கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைய கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு எளிதில் கிடைத்துவிட்டது. இதற்கு நான் ரொம்பவே அதிர்ஷ்டசாலி என்று பேசியிருந்தார்.

பிரித்திவிராஜ் குடும்பம்:

இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் பிரித்திவிராஜ் அவர்கள் சுப்ரியா மேனன் என்பவரை 2011 ஆம் ஆண்டு பாலக்காட்டில் திருமணம் செய்து கொண்டார். இவர் பிபிசி இந்திய தொலைக்காட்சி செய்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது. அவள் பெயர் (alankrita) அலன்கிர்தா.

Advertisement