உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உயிர் மீதான பயத்தை இந்த கொரோனா வைரஸ் காட்டியுள்ளது. கொரோனா வைரசினால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அழிந்து கொண்டு வருகிறார்கள். இந்த கொரோனா வைரஸ் மக்களை படாதபாடு படுத்தி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனாவினால் 1071 பாதிக்கப்பட்டு உள்ளனர் மற்றும் 29 இறந்து உள்ளனர். இந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் இந்திய பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
மேலும், இந்த ஊரடங்கு உத்தரவினால் நாடு முழுவதும் கடைகள், போக்குவரத்துக்கள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸின் காரணமாக படப்பிடிப்புகளெல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரு சில நடிகர்கள் எல்லாம் ஆங்காங்கே படப்பிடிப்பு தளத்திலேயே மாட்டிக்கொண்டார்கள். அந்த வகையில் நடிகர் பிரித்திவிராஜ் அவர்கள் ஜோர்டான் நாட்டில் உள்ள பாலைவனத்தில் மாட்டிக் கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் ப்ளெஸ்சி இயக்கத்தில் நடிகர் பிரிதிவிராஜ் மலையாளத்தில் நடித்து வரும் படம் அது ஜீவிதம். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டில் நடந்து வந்தது. உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் காரணமாக சினிமா படப்பிடிப்பு தளம் முதல் கொண்டு அனைத்து துறைகளையும் மூட உத்தரவு போடப்பட்டு உள்ளது. ஜோர்டானில் இருந்து இந்தியாவுக்கு எப்போது விமானம் இயக்கப்படும் என்றும் தெரியவில்லை.
சில நாட்களுக்கு தான் இவர்களிடம் தேவையான உணவு பொருள் உள்ளது. இதனால் அது ஜீவிதம் படத்தின் படக்குழுவினர் 56 பேர் இந்திய நாடு திரும்ப முடியாமல் பாலைவனத்திலே சிக்கிக் கொண்டார்கள். இந்நிலையில் படத்தின் இயக்குனர் பிளெஸ்சி அவர்கள் கேரளாவின் முதல்வர் பிரணாயி விஜய் அவர்களுக்கு மெயில் மூலம் தங்களுடைய நிலமையை விளக்கி உதவி கேட்டு உள்ளார்.
உடனே அவர் ஜோர்டான் நாட்டு தூதரகத்தை தொடர்பு கொண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வரை படப்பிடிப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகளையும், அவர்களுக்கு தேவையான உணவு கிடைக்கவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இருப்பினும் அவர்கள் கவலை இல்லாமல் இல்லை. விமானங்கள் எப்போது இயக்கப்பட்டு இந்தியா திரும்ப போறோம் என்று மொத்த யூனிட்டும் கவலையில் உள்ளார்கள்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்றும் கொரோனாவை ஒழிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸை எதிர்த்து அரசாங்கம், காவல்துறை, மருத்துவர்கள் என அனைத்து துறையும் தங்களுடைய உயிரை கொடுத்து போராடி வருகிறார்கள்.
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் பிரித்விராஜ். பிரித்விராஜ் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.