என்கிட்ட மட்டும் அதிகாரம் இருந்துச்சி அங்க ஆட்றவங்க எல்லாரையும் – ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை கழுவி ஊற்றிய ரஞ்சித்.

0
444
- Advertisement -

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி குறித்து நடிகர் ரஞ்சித் விமர்சித்து இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற புதிய கலாச்சார நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடனம், பாடல், கலை நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதனால் மக்களும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி குறித்து நடிகர் ரஞ்சித் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பது, சமீப காலமாக ஒரு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு முடுக்கிலுமே ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி :

நீங்கள் எல்லாம் எங்கிருந்து வருகிறீர்கள்? உங்கள் அம்மா, அப்பா யார்? பெண் குழந்தைகளை அரைகுறை ஆடைகளுடன் தெருவில் ஆட விடுவது எல்லாம் மன வேதனையாக இருக்கிறது. என்னிடம் அதிகாரம் இருந்தால் அனைவருக்கும் ஆயுள் தண்டனை கொடுத்து விடுவேன். யார் மகனோ யாருடனோ ஆடுவது? யார் பெண்ணோ யாரோ ஆடலாம்? அது தான் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி. ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி மன அழுத்தத்தை போக்க தெருவில் கூத்தடிப்பது தான்.

நடிகர் ரஞ்சித் பேட்டி:

இந்த நிகழ்ச்சி எதிர்காலத்தில் அடுத்த கட்டத்துக்கு போகும். ஒரு தாய்லாந்து போலவோ, சிங்கப்பூரை போலவோ மாறிவிடும். அப்படி வரக்கூடாது, வரவும் விடமாட்டோம் என்று கடுமையாக ரஞ்சித் பேசி இருக்கிறார். ரஞ்சித்தின் இந்த கருத்து சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருக்கிறது. பலருமே ரஞ்சித் கருத்திற்கு எதிராக குரல் கொடுத்தும், விமர்சித்தும் வருகிறார்கள்.

-விளம்பரம்-

ரஞ்சித் திரைப்பயணம்:

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பெரும்பாலான ஹீரோக்கள் படங்களில் நண்பனாகவும், வில்லனாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் ரஞ்சித். அதோடு இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து இருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் நடித்து இருக்கிறார்.

ரஞ்சித் நடிக்கும் சீரியல்:

இறுதியாக இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் ஜீவன் நடித்த அதிபர் என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின்னர் தமிழில் வேறு எந்த படத்திலும் ரஞ்சித் நடிக்கவில்லை. சிறிய இடைவெளிக்கு பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செந்தூரப்பூவே’ தொடர் மூலம் மீண்டும் நடிக்கத் துவங்கினார். இந்த சீரியல் கடந்த ஆண்டு முடிவடைந்தது. தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் பழனிச்சாமி என்ற ரோலில் கலக்கி வருகிறார்.

Advertisement