கடந்த வருடம் தீபாவளிக்கு விஜய் நடிப்பில் வெளிவந்த படம் மெர்சல். இந்த படம் விஜயின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய படமாக அமைதந்து. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யாமேனன், காஜல் அகர்வால் மற்றும் சமந்தா ஆகியோர் நடித்தருந்தனர்.
மேலும், படத்தில் போலீஸ் ஆபீசராக நடிகர் சத்யராஜ் நடித்திருப்பார். இவருக்கு இந்த படத்தில் போலீஸ் கேரக்டர் கொடுக்கப்பட்டாலும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே படத்தில் வருவார். சத்யாராஜுக்கு மிகப்பெரிய ரோல் இருக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்தது.
ஆனால் படப்பிடிப்பில் காட்டப்பட்டதை விட மிக அதிகமாக நடித்து கொடுத்துள்ளார் சத்யராஜ். இது குறித்து தற்போது பெருந்தன்மையாக பேசியுள்ளார் அவர்,மெர்சல் படத்தில் நிறைய காட்சிகள் நடித்து கொடுத்தேன். ஆனால் கடைசியில் சில விஷயங்களில் என்னுடைய பல காட்சிகளை கட் செய்ய வேண்டியதாயிற்று. அதனால் அட்லீ கட் செய்துவிட்டார்.
ஆனால், அவர் என்ன செய்வார் பாவம். அட்லீ மீது எந்த தவறும் இல்லை. படத்திற்கு சிறிது தேவை இல்லாமல் இருந்திருக்கும் அதனால் கட் செய்திருப்பார் அட்லீ. இதனால் அவர் மீதும் படக்குழு மீதும் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இது இயல்பாக எல்ல படத்திலும் நடக்க கூடியது தான்.என பெருந்தன்மையாக பேசினார் சத்யராஜ். இதற்கு முன்னர் தனது முதல் படமான ராஜா ராணியி