புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் நடிகர் தவசிக்கு நடிகர் சிம்பு உதவிக்கரம் நீட்டியுள்ளார். தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரியின் தந்தையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் தவசி. அந்த படத்திற்கு பின்னர் ரஜினிமுருகன், கொம்பன், விசுவாசம் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் கூட துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் தவசி. இவரை பெரும்பாலோருக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாகத்தான் தெரியும்.
ஆனால் கிழக்கு சீமையிலே படம் துவங்கி கடந்த 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வரும் இவர் எண்ணற்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நடிகர் தவசி புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். சமீபத்தில் இவரது வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது. அதில் பேசியுள்ள தவசி தான் 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருவதாகவும், தமக்கு இப்படி ஒரு நோய் ஆண்டவன் கொடுப்பான் என்று நினைத்து பார்க்க இல்லை என்றும் கூறி இருக்கிறார் நடிகர் தவசி.
அதேபோல போதிய பணம் இல்லாததால் சிகிச்சைக்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாக கூறியுள்ள தவசி தனக்கு சக கலைஞர்கள் உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.தவசி உதவி கேட்டு பேசிய இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. மேலும், பலரும் அந்த வீடியோவில் சூரி மற்றும் சிவகார்த்திகேயனை டேக் செய்தும் இருந்தனர். இதையடுத்து சிவாகார்த்தியேகன் சார்பாக 25,000 ரூபாயும் சூரி சார்பாக 20,000 ரூபாயும் வழங்கப்பட்டது. அதே போல விஜய் சேதுபதி 1 லட்சம் ரூபாய்யை அளித்திருந்தார்.
தொடர்ந்து அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய விஜய் சேதுபதி, கவலைப்படாத மாமா பாத்துக்கலாம், சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்புவீங்க என்று ஆறுதல் கூறியுள்ளார். இப்படி ஒரு நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தவசிக்கு சிம்பு 1 லட்சம் ரூபாயை கொடுத்து உதவியுள்ளார். இதையடுத்து சிம்புவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.