தக் லைப் பட விழாவில் சிம்பு பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் நுழைந்து பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து ஆண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
பின் இடையில் இவரின் படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார். பின் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் வெளியாகி இருந்தது. பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது. இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றியை பெற்றது.
சிம்பு திரைப்பயணம்:
இதனை தொடர்ந்து கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான படம் பத்து தல. இந்த படத்தை இயக்குனர் ஒபேலி என் கிருஷ்ணா இயக்கி இருந்தார். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து இவர் படங்களில் நடித்து கொண்டு வருகிறார். தற்போது கமல் நடித்த படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். ஏற்கனவே கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படம் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
தக் லைஃப் படம்:
கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது. இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான போஸ்ட் ப்ரோடாக்சன் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றிருக்கிறது.
விழாவில் சிம்பு:
இதில் ஏ ஆர் ரகுமான். மணிரத்தினம், கமல், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய சிம்பு, எனக்கு இந்த படம் ஒரு கனவாகவே இருக்கிறது. மணிரத்தினம், என்னுடைய குரு கமல் என எல்லோருமே ஒரே படத்தில் இணைந்திருப்பது நம்ப முடியாத ஒன்று. இந்த படத்தில் ஆரம்பத்தில் படப்பிடிப்பு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஏற்கனவே நான் மணிரத்தினத்துடன் இணைந்து செக்க சிவந்த வானம் என்ற படத்தில் நடித்தேன். அதனால் சில நாட்களுக்கு பின்பு மணிரத்தினம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்து கொண்டு இந்த படத்தில் நடித்தேன்.
கமல் பற்றி சொன்னது:
சிறுவயதில் இருந்தே நான் நடித்து வருகிறேன். இருந்தாலும் கமலஹாசன் படம் பார்த்து வளர்ந்த நான் இன்று அவருடன் நடித்திருக்கிறேன். அது எனக்கு ரொம்ப ஸ்பெஷல். கமல் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார். நிறைய ஊக்கப்படுத்தினார். ஒரு பேன் பாயாக சொல்கிறேன் அவருக்கு பக்கத்தில் எனக்கு இருக்கை என்பது அவருடைய பெருமிதம். இந்த படம் வித்தியாசமான முயற்சியாக இருக்கும். நாயகன் படத்திற்கு பிறகு கமலஹாசன்- மணிரத்தினம் சேர்ந்திருக்கிறார்கள். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும். இந்த படத்தினுடைய ஒரு பகுதியாக நான் இருப்பது ரொம்ப மகிழ்ச்சி என்று கூறி இருக்கிறார்.