பிரபல நடிகர் விச்சு விஸ்வநாத் மகளுக்கு திருமணம் நடைபெற இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் விச்சு விஸ்வநாத். இவர் இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த சந்தன காற்று என்ற படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார்.
அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் பெரும்பாலும் வில்லன், குணசித்திரம், காமெடி என பல வித கெட்டப்பில் நடித்திருக்கிறார். இதுவரை இவர் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் இயக்குனர் சுந்தர் சி யின்
நெருங்கிய நண்பர் ஆவார்.
விச்சு விஸ்வநாத் திரைப்பயணம்:
சுந்தர் சி உடன் மட்டும் இணைந்து நடிகர் விச்சு விஸ்வநாதன் அவர்கள் 38 படங்களில் பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக, அரண்மனை, கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு, ஆம்பள, முத்தின கத்திரிக்கா, கலகலப்பு 2 போன்ற படங்களில் அவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
விச்சு விஸ்வநாத் நடித்த சீரியல்:
அதுமட்டுமில்லாமல் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமும் இருக்கிறது. தற்போதும் இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் படங்களில் மட்டும் இல்லாமல் சின்னத்திரை சீரியலிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக, இவர் மர்மதேசம் விடாது கருப்பு, செல்லமே, நந்தினி, லட்சுமி ஸ்டோர்ஸ் போன்ற பல தொடர்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் விச்சு விஸ்வநாத் மகளுக்கு திருமணம் நடைபெறும் தகவல் தான் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
விச்சு விஸ்வநாத் மகள் திருமணம்:
இவருடைய மகளின் பெயர் கோகிலா விஸ்வநாத். தற்போது இவர் ஐடி துறையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஸ்ரீகாந்த் என்பவருக்கும் தான் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீகாந்த் ஜெர்மனியில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இவர்களுடைய திருமணம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
திருமணம் குறித்த தகவல்:
தற்போது இவர்களுடைய திருமண வேலைகளில் இரு விட்டாரும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் இவர்களுடைய திருமணத்தில் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலருமே விச்சு விஸ்வநாத் மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.