ஊருக்கே பாடியளந்த கேப்டனின் சகோதரர் மதுரையில் இப்படி ஒரு தொழில் செய்து வருகிறாரா?

0
677
- Advertisement -

விஜயகாந்தின் பூர்வீகம், அவருடைய உடன் பிறந்தவர்கள் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மக்கள் மத்தியில் என்றென்றும் கேப்டனாக திகழ்பவர் விஜயகாந்த். இவர் நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதர் என்றே சொல்லலாம். புரட்சி கலைஞர் என்று பலராலும் அழைக்கப்பட்டவர். தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காத ஒரே நடிகர் விஜயகாந்த்.

-விளம்பரம்-

ஏழை, உதவி கேட்டு வருபவர்கள் என அனைவரையும் சமமாக பார்த்து அவர்களுக்கு உணவளித்து மகிழ்ந்தவர். வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து உதவியவர். இப்படி பல உதவிகளை செய்த இவர் தேமுதிக என்ற கட்சியை துவங்கி அரசியலில் குதித்தார். மேலும், கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். கடந்த மாதம் விஜய்காந்த் அவர்களுக்கு இருமல், சளி அதிகமாக இருந்ததால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.

- Advertisement -

விஜயகாந்த் இறப்பு:

இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் . பின் விஜயகாந்த் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

பிரபலங்கள் இரங்கல்:

அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. விஜயகாந்தின் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவருடைய மறைவு இந்திய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இன்னும் ஏராளமான மக்கள் நேரில் சென்று விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

விஜயகாந்த் குடும்பம்:

இந்நிலையில் விஜயகாந்தின் உடன் பிறந்தவர்கள், தொழில் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜயகாந்த் மதுரையில் பிறந்தவர். இவருடைய தந்தை ரைஸ் மில் உரிமையாளர். இவருக்கு சிறு வயதிலேயே சினிமாவின் மீது ஆசை இருந்ததால் சென்னைக்கு வந்து தன்னுடைய திறமையை நிரூபித்து சினிமாவிலும் வெற்றி கண்டார். இவருடன் பிறந்தவர் 11 பேர். ஆறு ஆண் குழந்தைகள், ஆறு பெண் குழந்தைகள். விஜயகாந்த் சென்னையில் வந்து செட்டில் ஆனதால் அவருடன் பிறந்தவர்களும் வெவ்வேறு பகுதியில் குடும்பத்துடன் செட்டில் ஆகி விட்டார்கள்.

விஜயகாந்த் உடன்பிறந்தவர்கள் நிலை:

மேலும், மதுரையில் இருக்கும் விஜயகாந்தினுடைய பூர்வீக வீட்டில் தற்போது விஜயகாந்தின் தம்பிகளான பால்ராஜ், செல்வராஜ் தங்களுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். விஜயகாந்தின் சகோதரர் தம்பி செல்வராஜ் மதுரையில் பிளாஸ்டிக் பொருள் வியாபாரம் செய்து வருகிறார். அதோடு விஜயகாந்த் சென்னையில் செட்டில் ஆனதால் இவர் தன்னுடைய பூர்வீக வீட்டுக்கு செல்வதையே நிறுத்திக் கொண்டாராம். எப்போவாவது ஒரு முறை குலதெய்வ கோயிலுக்கு மட்டும் குடும்பத்துடன் சென்று வருவாராம்.

Advertisement