தமிழ் சினிமாவில் சிவாஜி கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் அது விக்ரம் என்றே சொல்லலாம், தென்னிந்தியா சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் விக்ரம். இவரை “சியான் விக்ரம்” என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள். இவருடைய இயற்பெயர் கென்னடி ஆகும்.ஆனால், சினிமா துறைக்கு வந்ததற்கு பிறகு விக்ரம் என்று மாற்றிக்கொண்டார். நடிப்பில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் தன்னுடைய திறமையால் கால் தடம் பதித்துள்ளார்.
இவரது தந்தையான ஜான் விக்டர் பரமக்குடியில் இருந்து சென்னைக்கு வந்து சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்தார் ஆனால் இவருக்கு சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடிக்கவும் சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது இதனால் தனது மகன் விக்ரமை எப்படியாவது சினிமாவில் இந்த மாபெரும் நடிகர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் சிறு வயது முதலே அவருக்கு ராசிகள் நடனத்தையும் சினிமாவில் ஆடம்பரத்தையும் பயிற்சியளித்தார் அதன்பின்னர் விக்ரம் தனது கடின உழைப்பு மூலம் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமானார்.
மேலும் விக்ரமுக்கு அரவிந்த் என்ற சகோதரர் இருக்கிறார் அவர் தற்போது துபாயில் வசித்து வருகிறார் வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சரோஜா படத்தில் வில்லனாக நடிப்பதாக இருந்தது ஆனால் அது நடக்காமல் போனது அதேபோல விக்ரமிற்கு ஒரு தங்கையும் இருக்கிறார் அவருடைய பெயர் அனிதா அவர் ஒரு ஆசிரியராக பணியாற்றி வருகிறார் விக்ரமின் சகோதரர் அரவிந்த் பல்வேறு பேட்டி அளித்துள்ளார் அதனால் இவரை பலரும் கொண்டிருக்கின்றார்கள் ஆனால் அவரது சகோதரியான அனிதாவை யாரும் இதுவரை பார்த்தது கிடையாது.
இந்த நிலையில் நடிகர் விக்ரம் பல ஆண்டுகளுக்கு முன்னர் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது இதுமட்டுமல்லாமல் விக்ரமின் சகோதரி சகோதரிக்கு ஒரு மகனும் இருக்கிறார். அவருடைய பெயர் அர்ஜுனன். மேலும், நடிகர் விக்ரமின் சகோதரி அனிதாவின் மகன் அர்ஜுனன் ஒரு படத்தில் நடிக்கப்போவதாக கடந்த சில காலத்திற்கு முன்னர் தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.