நிர்வாண போட்டோ ஷூட்டால் ரன்வீர் சிங்கிற்கு கிளம்பிய எதிர்ப்பு – அவரை பார்த்து போட்டோ ஷூட் செய்த விஷ்ணு விஷால் கொடுத்த விளக்கம்.

0
474
vishnuvishal
- Advertisement -

சமீபத்தில் ரன்வீர் சிங் நடத்திய நிர்வாண போட்டோ சூட்டிற்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அவரை பார்த்து போட்டோ ஷூட் நடத்திய விஷ்ணு விஷாலுக்கும் கடும் எதிர்பு கிளம்பியது. இப்படி ஒரு நிலையில் சர்ச்சை போட்டோ ஷூட் நடத்தியதற்காக காரணத்தை கூறி இருக்கிறார் விஷ்ணு விஷால். பாலிவுட்டில் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் ரன்வீர் சிங் எப்போதுமே வித்தியாசமாக உடை அணியக்கூடியவர். பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் கூட அவர் அதனை அத்தனை நம்பிக்கையுடன் அணிந்து வருவதை பார்த்தால் ஃபேஷன் மீது ரன்வீருக்கு இருக்கும் ஈடுபாடு வெளிப்படையாகவே தெரியும்.

-விளம்பரம்-

உடைக்கு ஏற்ற மாதிரி சிகை அலங்காரத்தை மாற்றுவதுதான் ரன்வீரின் ஸ்டைல் . பாலிவுட்டின் ஸ்டைல் ஐகானாக ரன்வீர் கொண்டாடப்படுகிறார்.ஹாலிவுட் நடிகர் ஹங்க் பர்ட் ரெனால்ட்ஸுக்கு சமர்பணம் செய்யும் விதமாக ரன்வீர் சிங் தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு தனது நிர்வாண போஸை கொடுத்துள்ளார். ஹாலிவுட் நடிகர் ஹங்க் பர்ட் ரெனால்ட்ஸ் ஏற்கனவே கொடுத்திருந்த புகைப்படத்தை மாடலாக கொண்டு அதே போன்ற புகைப்படத்தை வெளியிட்டார்.

- Advertisement -

ரன்வீர் சிங் சர்ச்சை போட்டோ ஷூட் :

ஒரு சிலர் ரன்வீர் சிங் எடுத்த முயற்சியை பாராட்டினாலும், மற்றொரு புறம் இவரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு வந்தவண்ணமே உள்ளது.நடிகர் ரன்வீர் சிங் நான் உடல்ரீதியாக நிர்வாணமாக இருப்பது மிகவும் எளிதானது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக நான் நிர்வாணமாக இருந்துள்ளேன். முதலில் என் ஆன்மாவை நீங்கள் பார்க்க வேண்டும். அது எவ்வளவு நிர்வாணமாக இருக்கிறது என்று. நிச்சயமாக என் உடலோடு என் ஆன்மாவும் நிர்வாணமாகதான் இருக்கிறது.

ரன்வீர் சிங் அளித்த விளக்கம் :

என்னால் ஆயிரம் பேருக்கு முன்னாள் நிர்வாணமாக இருக்க முடிகிறது. ஆனால், அந்த ஆயிரம் பேரும் என் முன்னால் அசௌகரியமாக இருப்பதாக தெரிவித்தார்.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு விவாத குரலும் எழுந்துள்ளது. சிலர் ரன்வீர் சிங்கின் செயல் மிகவும் துணிச்சலானது என்று பாராட்டியும் இருக்கின்றனர். இந்த நிலையில் மும்பையில் ரன்வீர் சிங் மீது தொண்டு நிறுவனம் ஒன்று போலீஸில் புகார் செய்துள்ளது.

-விளம்பரம்-

குவியும் எதிர்ப்புகள் :

பெண்களின் உணர்வுகளை புன்படுத்திவிட்டதாக கூறி மும்பை போலீஸார் ரன்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சில இடங்களில் ரன்வீர் சிங்கிற்கு எதிராக போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது. இப்படி ரன்வீர் சிங்கிற்கு எதிர்புகள் கிளம்பிய நிலையில் அவரை பார்த்து போட்டோ ஷூட் செய்த விஷ்னு விஷாலும் எங்கே தன் மீதும் புகார் வந்துவிடுமோ என்ற பயத்தில் இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நிவாரண போட்டோ ஷூட்டிற்கு விஷ்ணு விஷால் விளக்கமளித்துள்ளார்.

ஜகா வாங்கிய விஷ்ணு விஷால் :

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது ‘அது போட்டோஷூட் இல்லை, தூங்கி எழுந்ததும் எடுத்த போட்டோ. என் physique நன்றாக இருந்ததால் எடுத்தார். ஆனால் அதை போஸ்ட் செய்யலாமா வேண்டாமா என்பதை யோசித்தபோது சமீபத்தில் ரன்வீர் சிங், விஜய் தேவரகொண்டா ஆகியோர் நிர்வாண போட்டோ வெளியிட்டது தெரிந்தது.நான் இப்படிப்பட்ட படங்களில் நடிக்க முடியும் என ஒரு perception இருக்கிறது. அதை உடைக்க தான் இப்படி போட்டோக்கள் வெளியிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement