தொலைக்காட்சி தொடர்கள் பல வருடங்களாகவே ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் படங்களை பார்ப்பதை விட தொலைக்காட்சி தொடர்களை தான் தவறாமல் பார்க்கிறார்கள். அது மட்டுமில்லாமல் குடும்பத்துப் பெண்களின் பொழுது போக்குக்காக தான் இந்த சீரியல் தொடங்கப்பட்டது . முதலில் குடும்பப் பெண்கள் மட்டும் தான் தொடர்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்கள். ஆனால், தற்போது ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் சீரியல்களை பார்க்கும் சூழல் உருவாகி உள்ளது.
அந்த வகையில் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான சீரியல் என்றால் அது மெட்டி ஒலி சீரியல் தான். ஆண்டுகள் பல கடந்தாலும் தற்போது வரை மக்கள் மெட்டி ஒலி சீரியலை பற்றி பேசிக் கொண்டு தான் உள்ளார்கள். 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பானது தான் இந்த மெட்டி ஒலி சீரியல். இந்த சீரியலை திருமுருகன் அவர்கள் இயக்கினார். மெட்டி ஒலி சீரியலில் நடித்த நடிகர்கள் எல்லோருமே மிகப் பெரிய அளவில் பிரபலமானர் என்று சொல்லலாம். இந்த சீரியலை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க மாட்டார்கள். அதுவும் இந்த மெட்டி ஒலி சீரியலில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவரை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.
இவர் தனது நடிப்பினால் அனைவரையும் கட்டிப் போட்டவர். இவர் நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மேலும், இவரது உண்மையான பெயர் விஸ்வநாதன். தனது கல்லூரி படிப்பினை முடித்த உடன் இவர் சின்ன சின்ன நாடகங்களில் நடித்து வந்தார். அதன் மூலம் தான் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மெட்டி ஒலி சீரியல் மூலம் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின்னர் நடிகர் விஸ்வநாதன் அவர்கள் இந்த சீரியலுக்கு தொழிலதிபரின் மகளை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு 14 வயதில் ஒரு மகனும் உள்ளார்.
மெட்டி ஒலி சீரியலுக்கு பின் நடிகர் விஸ்வநாதன் அவர்கள் கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொண்டார். திருமணத்திற்கு பின் நடிகர் விஸ்வநாதன் அவர்கள் மீண்டும் அதே சன் டிவியில் ஒளிபரப்பான பொன்னூஞ்சல் சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் இடம் பிடித்தார் என்று சொல்லலாம். அதற்கு பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. இவர் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தார். பின் இவர் எதிர்பார்த்த அளவிற்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் இவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
தற்போது நடிகர் விஸ்வநாதன் அவர்கள் ஒரு கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். சமீபத்தில் நடிகர் விசுவநாதன் அவர்கள் பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அதில் அவர் கூறியது, சீரியல் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டேன். ஆனால், எனக்கு சினிமாவில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனக்கு இது மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார் என்று பிரபல பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.