ரட்சகன் நடிகை சுஸ்மிதா சென்னுக்கு மாரடைப்பு , சூப்பர் பிட்டாக இருந்தும் இப்படியா ?

0
577
- Advertisement -

லிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சுஷ்மிதா சென். நடிகை சுஷ்மிதா சென் அவர்கள் பெங்காலி குடும்பத்தை சேர்ந்தவர். இவர் ஹைதராபாத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை முன்னாள் இந்திய விமானப்படை கமாண்டர் ஆவார். தாயார் ஒரு பேஷன் கலைஞராகவும், நகை வடிவமைப்பாளராகவும் இருந்தவர். ஹைதராபாத்தில் பிறந்த சுஷ்மிதா சென் புதுடில்லியில் வளர்ந்தார். விமானப்படை பொன்விழா கல்வி மையத்தில் கல்வி பயின்றார். பின் மைத்ரேயி கல்லூரியில் பட்டம் பெற்றவர். பிறகு சுஷ்மிதா சென் தன்னுடைய கேரியரை மாடலிங்கில் தொடங்கினார்.

-விளம்பரம்-

மேலும், யுனிவர்சல் அழகி(பிரபஞ்ச அழகி) என்ற பட்டத்தை 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்தியாவிற்கு வாங்கி தந்தவர் சுஷ்மிதா சென். அதற்கு முன்பு இவர் மிஸ் இந்தியா என்ற பட்டம் வென்றார். இப்போட்டியில் ஐஸ்வர்யா ராயைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய 18 வயதில் அழகி பட்டம் பெற்றவர். இதற்கு பிறகு தான் இவர் சினிமா உலகில் நடிக்க ஆரம்பித்தார். இவர் 1996 ஆம் ஆண்டு தஸ்தக் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

- Advertisement -

சுஸ்மிதா சென்னின் திரைப்பயணம்:

அதனை தொடர்ந்து இவர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ரட்சகன் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் மிகப் பெரிய அளவிற்கு வெற்றியை கொடுத்தது. அதற்கு பிறகு இவருக்கு தமிழில் படங்கள் சரியாக அமையவில்லை என்றவுடன் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். மேலும், பாலிவுட்டில் நடிகை சுஸ்மிதா சென் அவர்கள் நிறைய படங்களில் நடித்தார். பாலிவுட்டில் இவர் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்துள்ளார்.

சுஸ்மிதா சென் குடும்பம்:

பின் இவர் பல வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி உள்ளார். பிறகு இவர் 2000ம் ஆண்டில் ரெனீ என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார். அதன் பின் ஜனவரி 13, 2010 அன்று அலிசா என்ற மூன்று மாத பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார் என்பது குறிப்பிடதக்கது. மேலும், பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்ந்த சுஸ்மிதா சென் கடந்த பத்து ஆண்டுகளில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. கடைசியாக இவர் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த துள்க மில் காய (Dulha Mil Gaya) என்ற பாலிவுட் படத்தில் தான் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

சுஸ்மிதா சென் இன்ஸ்டா பதிவு :

இதனை தொடர்ந்து சமீபத்தில் ஆர்யா நடித்த வெப் சீரிஸ் நடித்திருந்தார் அதற்கு பிறகு பெரிதாக நடிக்கவில்லை. இந்நிலையில் தான் இவருக்கு சமீபத்தில் மாரடைப்பு வந்துள்ளது அதனை அவரே தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தின் மூலம் சொல்லியிருக்கிறார். அவர் பதிவிட்டிருப்பது “உங்களுடைய இதயத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள் அப்போதுதான் அது உங்களுக்கு தேவையான போது துணை நிற்கும். இதனை என்னுடைய தந்தை சென்சு பிரின் சின்ன அற்புதமான கருத்து.

Verified “Keep your heart happy & courageous, and it’ll stand by you when you need it the most Shona” 🤗👏❤️ (Wise words by my father @sensubir ) 😍 I suffered a heart attack a couple of days back…Angioplasty done…stent in place…and most importantly, my cardiologist reconfirmed ‘I do have a big heart’ 😉😄❤️ Lots of people to thank for their timely aid & constructive action…will do so in another post! 🤗❤️🙏 This post is just to keep you (my well wishers & loved ones) informed of the good news …that all is well & I am ready for some life again!!!

சமீபத்தில் எனக்கு மாரடைப்பு வந்தது, அதனால் ஆஞ்ஜியோபிளாஸ்டி செய்யப்பட்டது. ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் என்னுடை இதயம் மிகவும் பலவீனமாக இருக்கிறது உறுதிப்டுத்தினார்கள். இந்நிலையில் சரியான நேரத்தில் எனக்கு உதவி செய்த பலருக்கும் என்னுடைய நன்றிகள். என்றும் பதிவிட்டிருந்தார். ஏற்கனவே சமீபத்தில் மயில்சாமி மாரடைப்பு வந்து இறந்த நிலையில் தற்போது நடிகை சுஸ்மிதா சென்நிற்கு மாரடைப்பு வந்துள்ளது அவரது ரசிகர்களை கலக்கமடைய செய்துள்ளது

Advertisement