நடிகைகள் என்றாலே அவர்களுக்கு உடல் அமைப்பு என்பது மிக அவசியம் .அவர்கள் எந்த அளவிற்கு தங்களது தோற்றத்தை பாராமரிக்கிறார்களோ அதனை பொறுத்தே பட வாய்ப்புகளும் வரும்.அதே நிலமை தான் தற்போது நாடோடிகள் படக்த்தில் சசிக்குமாற்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிநயா வின் நிலையும். அந்த படத்தில் சரளமாக வசனங்களை பேசிய இவர் காது ,மற்றும் பேச்சித்திரன் குறைபடுள்ளவர் என்பது அந்த படத்திற்கு பின்னர் தான் பலருக்கும் தெரியவந்தது.
1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இவரது தந்தை ஆனந்த ஒரு சிறிய நடிகராக திகழ்ந்து வந்தார்.நடிகை அபிநயா தமிழில் நாடோடிகள் படத்தில் அறிமுகமானாலும் இவர் முதலில் நடித்த படம் 2008 இல் தெலுங்கில் வெளியான னெனிந்தே என்ற படத்தில் தான்.
கேட்கும் திறனில் குறையுள்ள இவர் தனது 17 வயதில் நடிக்க தொடங்கிய அபிநயா படங்களில் நடிக்கும் போது வசங்களை ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டு பின்னர் அதனை மணப்பாடம் செய் துகொண்டு பேசுவாராம்.
இவர் நாடோடிகள் படத்திற்கு பிறகு ஈசன்,7ஆம் அறிவு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம் போன்ற பல படங்களிலும் நடித்த அபிநயா தற்போது உடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார்.