‘என் டீ ஷர்டுக்குள் கை விட்டான்’ தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்த ஆண்டிரியா

0
142
andrea
- Advertisement -

பேருந்தில் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து நடிகை ஆண்ட்ரியா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக பிரபல நடிகையாக விளங்கி வருபவர் ஆண்ட்ரியா. இவர் சினிமா மட்டும் இல்லாமல் பின்னணி பாடகியும் ஆவார். முதலில் இவர் பின்னணி குரல் கொடுக்கும் நடிகையாக தான் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பின்னர் தான் ஆண்ட்ரியா சினிமாவில் நடிகையாக மாறினார்.

-விளம்பரம்-
andrea

அதிலும் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, மங்காத்தா, விஸ்வரூபம் ஆகிய திரைப்படங்களில் மூலம் தான் ஆண்ட்ரியா மக்களிடையே அதிகமாக பேசப்பட்டார். பின் நடிகை ஆண்ட்ரியா அவர்கள் பல்வேறு முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் தெலுங்கில் வெளியான புஸ்பா படத்தில் இவர் பாடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் வேற லெவலில் ஹிட் அடித்தது.

- Advertisement -

ஆண்ட்ரியா திரைப்பயணம்:

சொல்லப்போனால் தெலுங்கு பாடலை விட தமிழ் பாடல் தான் மாபெரும் ஹிட் அடித்தது என்று கூறப்படுகிறது. இறுதியாக விஜய்யின் மாஸ்டர், அரண்மனை 3 போன்ற படத்தில் ஆண்ட்ரியா நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து நோ என்ட்ரி, வட்டம், மாளிகை, கா போன்ற பல்வேறு படங்களில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார். மேலும், தற்போது நடிகை ஆண்ட்ரியா அந்த பிசாசு 2 என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘பிசாசு’ திரைப்படமும் ஒரு பேய் படமாக இருந்தது.

andrea

பிசாசு 2 படம் பற்றிய தகவல்:

அதோடு தமிழ் சினிமாவில் ஒரு பேயை அன்பான பேயாக காட்டியது என்றால் அது மிஸ்கின் படத்தின் மூலம் தான். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது மிஸ்கின் அவர்கள் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்து இருக்கிறார். அதோடு முதல் பாகம், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பு இல்லை என்றும் இது மாறுபட்ட கதை என்றும் கூறியிருந்தார். இதில் கௌரவ தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

ஆண்ட்ரியா பேட்டி:

படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னரும் இன்னும் இப்படங்கள் வெளியாகாமல் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து கூறியிருந்தது, எனக்கு 11 வயது இருக்கும். நான் என்னுடைய அப்பாவுடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். அப்போது நான் ஜீன்ஸ், டீ சர்ட் அணிந்திருந்தேன். என்னுடைய அப்பா அருகில் தான் நானும் உட்கார்ந்து இருந்தேன்.

Andrea

பாலியல் தொல்லை குறித்து சொன்னது:

திடீரென்று என் டி சர்ட்க்குள் ஒருவர் கைவிடுவதை போல் நான் உணர்ந்தேன். அந்தப் பதட்டத்தில் யாரிடம் என்ன சொல்வது? என்று செய்யாமல் அப்பா பக்கத்திலேயே பயந்து கொண்டு அமர்ந்து இருந்தேன். இதை ஏன் என்னால் யாரிடமும் சொல்ல முடியவில்லை என்றும் தெரியவில்லை. அப்போது எனக்கு அழுகை மட்டும் தான் வந்தது என்று எமோஷனலாக பேசி இருந்தார். தற்போது ஆண்ட்ரியாவின் இந்த பேட்டி வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Advertisement